மேலும் அறிய

Crime: பெரம்பலூர் சிறுவன் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை

பெரம்பலூரில் சிறுவனை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த மர்ம கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரம்பலூர் நகராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு ஜூலி என்கிற மனைவியும், ரோஹித் ராஜ் (வயது 14), பிரவீன்ராஜ் (12), பவுன்ராஜ் (8) ஆகிய 3 மகன்களும் உள்ளனர். கணேசன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் ரோஹித் ராஜ் 9-ம் வகுப்பு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் பூக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலைக்கு ஏதும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி  இரவு 7.15 மணியளவில் இந்திரா நகரில் இருந்து அங்காளம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள சமுதாய கழிவறையில் இருந்து ரோஹித் ராஜ் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் தன்னை காப்பாற்றுமாறு தலை தெறிக்க வெளியே வந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்காக ஓடி வந்தார். ஆனால் சிறிது தூரத்திலேயே சாலையில் சரிந்து கீழே விழுந்த ரோஹித் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


Crime: பெரம்பலூர் சிறுவன் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை

இதனை தொடர்ந்து  ரோஹித் ராஜின் உடலை அவரது உறவினர்கள் பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதையடுத்து ரோஹித் ராஜின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சமுதாய கழிவறையில் மதுபாட்டில்கள் நொறுங்கியும், அதனை சுற்றி ரத்த கறையும் இருந்தது. இதனால் மர்ம கும்பல் ரோஹித்ராஜை அழைத்து சென்று மது அருந்தி காலி மது பாட்டில்கள் உள்ளிட்டவையால் குத்தி விட்டு தப்பியிருக்கலாம். இதில் பலத்த காயமடைந்த ரோஹித் ராஜ் உயிரிழந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் ரோஹித்ராஜை அவரது நண்பர்களே சேர்ந்து முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் அதே பகுதியை சோ்ந்த 21 வயதுடைய நபர் உள்பட 8 பேர் மீது சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.


Crime: பெரம்பலூர் சிறுவன் கொலை வழக்கில் 5 பேரிடம் விசாரணை

சிறுவனை மது பாட்டிலால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூரில் தொடர் திருட்டு, வழிப்பறி நடைபெற்று வருவதை தொடர்ந்து தற்போது கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காவல்துறையின் தீவிர விசாரனையில் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் நேற்று 5 பேரை பிடித்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
“ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
Seeman: நாதக செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி: சூளுரைத்த சீமான்!
Seeman: நாதக செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி: சூளுரைத்த சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
“ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
Seeman: நாதக செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி: சூளுரைத்த சீமான்!
Seeman: நாதக செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டி: சூளுரைத்த சீமான்!
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 12-ம் தேதி செவ்வாய் கிழமை எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னைல ஆகஸ்ட் 12-ம் தேதி செவ்வாய் கிழமை எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரியுமா.?
விஜய் அமைதிக்கு காரணம் ஜான் ஆரோக்கியசாமியா? தொண்டர்கள் கொந்தளிப்பு! 2026 தேர்தல் வியூகமா?
விஜய் அமைதிக்கு காரணம் ஜான் ஆரோக்கியசாமியா? தொண்டர்கள் கொந்தளிப்பு! 2026 தேர்தல் வியூகமா?
Vijay vs Vishal : ’விஜய் எதிராக விஷால் போட்டி?’ உதயநிதி பக்கா ஸ்கெட்ச்..!
’விஜய் எதிராக விஷால் போட்டி?’ உதயநிதி பக்கா ஸ்கெட்ச்..!
MEd Admission: அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed. சேர்க்கை: விண்ணப்பம் இன்று தொடக்கம்! முக்கிய தேதிகள் இதோ!
MEd Admission: அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed. சேர்க்கை: விண்ணப்பம் இன்று தொடக்கம்! முக்கிய தேதிகள் இதோ!
Embed widget