மேலும் அறிய

Cannabis arrest: அடப்பாவிகளா.! சொட்டுநீர் பாசனம் மூலம் கஞ்சா செடி வளர்ப்பு.! தமிழன் சிக்கியது எப்படி.?

தமிழகத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், தேனியில் சொட்டு நீர் பாசனம் மூலம் 10 அடிக்கு உயர்ந்த கஞ்சா தோட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடரும் போதைப்பொருட்கள் நடமாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக காவல்துறையும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு சோதனைகளிலும் இறங்கியது. இருந்த போதும் பல இடங்களில் இளம்வயதினர் அதிகளவு போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்த பல நகரங்களில் கஞ்சா செடிகளை அழிக்க தொடர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தேனியில் தனது வீட்டு தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சொட்டு நீர் பாசனம்- 10 அடிக்கு வளர்ந்த கஞ்சா செடி

தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை பகுதியில் வசித்து வரும் தமிழன் என்பவர்,தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து,அதனை காய வைத்து உதிரியாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது வீட்டு தோட்டத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சுமார் பத்து அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டு மிரண்டனர். இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளரும், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபருமான தமிழன் (56)என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் நடத்திய தொடர் சோதனையில்,வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளில் இருந்து பறித்து,காய வைக்கப்பட்டு உதிரியாக விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டு தோட்டத்தில்  சொட்டுநீர் பாசனம் அமைத்து,நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கொலை வழக்கில் ஜாமின் வாங்கி கஞ்சா செடி வளர்ப்பு

இது தொடர்பாக கஞ்சா செடிகள் மற்றும் உதிரி கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,தமிழன் மற்றும் வேறு நபர்கள் இதுபோல இது அப்பகுதிகளில் வேறு இடங்களில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார்களா? என்று வனத்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனிடையே கஞ்சா செடி வளர்த்தாக கைது செய்யப்பட்ட தமிழன் கடந்த ஆண்டு கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். ல மாதங்களிலேயே ஜாமினில் வெளியே வந்து கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தமிழன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
பள்ளி மாணவியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற இளைஞர் - பொதுமக்கள் தர்ம அடி
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
இனோவா கார் ஆசையில் விழுந்த ‘அடி’... இன்ஸ்டாகிராம் ஆடையில் வந்த ‘இடி’... புதுச்சேரியை உலுக்கிய ஆன்லைன் கொள்ளை!
BT Arasakumar : 100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
100 கோடி மோசடி... சிக்கிய அரசகுமார்.! பள்ளி நிர்வாகத்திற்கு போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் போட்ட உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
CM Vijay: சமரசமே கூடாது! பெண்கள் பாதுகாப்பிற்காக ஐஏஎஸ், ஐபிஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என்ன?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
முதலமைச்சர் விஜய் 6 மணி வரை தலைமைச் செயலகத்தில் இருப்பது எதற்கு தெரியுமா?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
CM Vijay: அந்த துயரத்திற்கு பிறகு! அடுத்த வாரம் கரூர் செல்லப்போகும் முதலமைச்சர் விஜய்?
Trump on Iran: அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
அய்யா, இதுவாவது உண்மையா.! ஈரான் கேட்டதாக ட்ரம்ப் போட்ட புதிய பதிவு; என்ன சொல்லியிருக்கார் பாருங்க
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
விஜய் கட்சிக்கு விசிக செக் வைக்கிறதா? - திருமாவளவன் என்ன சொல்கிறார்?
Minister Ghilli Sarath : ’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..? – தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய் அணி..!
’போதைப்பொருள் புகார்’ தவெக அமைச்சர் சரத் நீக்கம்..?
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
பாக்யராஜூக்கு நிம்மதியாக அஞ்சலி கூட செலுத்த விடல...மீடியாவின் இரக்கமற்ற செயல்..ராதிகா வேதனை
Embed widget