மேலும் அறிய

Cannabis arrest: அடப்பாவிகளா.! சொட்டுநீர் பாசனம் மூலம் கஞ்சா செடி வளர்ப்பு.! தமிழன் சிக்கியது எப்படி.?

தமிழகத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், தேனியில் சொட்டு நீர் பாசனம் மூலம் 10 அடிக்கு உயர்ந்த கஞ்சா தோட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடரும் போதைப்பொருட்கள் நடமாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக காவல்துறையும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு சோதனைகளிலும் இறங்கியது. இருந்த போதும் பல இடங்களில் இளம்வயதினர் அதிகளவு போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்த பல நகரங்களில் கஞ்சா செடிகளை அழிக்க தொடர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தேனியில் தனது வீட்டு தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சொட்டு நீர் பாசனம்- 10 அடிக்கு வளர்ந்த கஞ்சா செடி

தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை பகுதியில் வசித்து வரும் தமிழன் என்பவர்,தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து,அதனை காய வைத்து உதிரியாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது வீட்டு தோட்டத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சுமார் பத்து அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டு மிரண்டனர். இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளரும், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபருமான தமிழன் (56)என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் நடத்திய தொடர் சோதனையில்,வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளில் இருந்து பறித்து,காய வைக்கப்பட்டு உதிரியாக விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டு தோட்டத்தில்  சொட்டுநீர் பாசனம் அமைத்து,நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கொலை வழக்கில் ஜாமின் வாங்கி கஞ்சா செடி வளர்ப்பு

இது தொடர்பாக கஞ்சா செடிகள் மற்றும் உதிரி கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,தமிழன் மற்றும் வேறு நபர்கள் இதுபோல இது அப்பகுதிகளில் வேறு இடங்களில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார்களா? என்று வனத்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனிடையே கஞ்சா செடி வளர்த்தாக கைது செய்யப்பட்ட தமிழன் கடந்த ஆண்டு கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். ல மாதங்களிலேயே ஜாமினில் வெளியே வந்து கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தமிழன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget