மேலும் அறிய

Cannabis arrest: அடப்பாவிகளா.! சொட்டுநீர் பாசனம் மூலம் கஞ்சா செடி வளர்ப்பு.! தமிழன் சிக்கியது எப்படி.?

தமிழகத்தில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், தேனியில் சொட்டு நீர் பாசனம் மூலம் 10 அடிக்கு உயர்ந்த கஞ்சா தோட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடரும் போதைப்பொருட்கள் நடமாட்டம்

தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக சட்டம் ஒழுங்கு மோசமாகி வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழக காவல்துறையும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு சோதனைகளிலும் இறங்கியது. இருந்த போதும் பல இடங்களில் இளம்வயதினர் அதிகளவு போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்த பல நகரங்களில் கஞ்சா செடிகளை அழிக்க தொடர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தேனியில் தனது வீட்டு தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சொட்டு நீர் பாசனம்- 10 அடிக்கு வளர்ந்த கஞ்சா செடி

தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கராஜபுரம்,கல்லுருண்டான் சுனை பகுதியில் வசித்து வரும் தமிழன் என்பவர்,தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து,அதனை காய வைத்து உதிரியாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அப்போது அவரது வீட்டு தோட்டத்தை பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது சுமார் பத்து அடி உயரத்திற்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்ததை கண்டு மிரண்டனர். இதனைத் தொடர்ந்து தோட்ட உரிமையாளரும், கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபருமான தமிழன் (56)என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அந்த வீட்டில் நடத்திய தொடர் சோதனையில்,வீட்டில் வளர்த்த கஞ்சா செடிகளில் இருந்து பறித்து,காய வைக்கப்பட்டு உதிரியாக விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், தனது வீட்டு தோட்டத்தில்  சொட்டுநீர் பாசனம் அமைத்து,நீண்ட காலமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரியவந்தது. அந்த கஞ்சாவை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சில்லறை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

கொலை வழக்கில் ஜாமின் வாங்கி கஞ்சா செடி வளர்ப்பு

இது தொடர்பாக கஞ்சா செடிகள் மற்றும் உதிரி கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார்,தமிழன் மற்றும் வேறு நபர்கள் இதுபோல இது அப்பகுதிகளில் வேறு இடங்களில் கஞ்சா செடிகள் வளர்த்து வருகிறார்களா? என்று வனத்துறையினர் உதவியுடன் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தெரிவித்தனர். இதனிடையே கஞ்சா செடி வளர்த்தாக கைது செய்யப்பட்ட தமிழன் கடந்த ஆண்டு கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கபட்டார். ல மாதங்களிலேயே ஜாமினில் வெளியே வந்து கஞ்சா செடிகள் வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தமிழன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
சொன்னதை செய்த விஜய்.! பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட CM
Iran on Hormuz: “ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
“ஹார்முஸ் ஒருபோதும் பழைய நிலைக்கு திரும்பாது“ செக் வைத்த ஈரான்; தொலைபேசி உதவி சேவைக்கு ஒப்புதல்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு தேதி அறிவிப்பு; ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்- ஊதியம், தகுதி!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
Qatar fire accident : கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
கத்தாரில் உயிரிழந்த தமிழர்கள்.! வேதனையில் தவித்த முதலமைச்சர் விஜய்... அமைச்சருக்கு அதிரடி உத்தரவு
Embed widget