மேலும் அறிய

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை, நீலாங்கரையில் கஞ்சாவை கடத்தி விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா பயன்பாடு அதிகளவில் காணப்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதிகளவில் கஞ்சா பயன்பாடு காணப்படுகிறது. இதைத் தடுக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நீலாங்கரை காவல் நிலையம் பகுதிக்குட்பட்டது கொட்டிவாக்கம். அங்குள்ள கடற்கரை பகுதியில் உதவி ஆய்வாளர் தினேஷ் தலைமையில் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை நிறுத்திய  போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால், சந்தேம் அடைந்த போலீசார் அவர்கள் மூன்று பேரின் உடமைகளையும் சோதனை செய்தனர். மேலும், அவர்களது வாகனத்தையும் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அதைப்பிரித்து பார்த்தபோது அதில் 1.5 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களின் வாகனங்களையும், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அந்த இளைஞர்கள் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்ற அஜீத்,21, ஜனிஷ் 21, சந்தோஷ் 25 என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் அவர்கள் கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சி செய்தனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்பனை செய்ய முயன்ற நபர்களை கைது செய்த போலீசாரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget