மேலும் அறிய

ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்: குள்ளநரி ‛குருவி’ சிக்கியது!

ஒரு கட்டத்தில் நல்ல வருவாய் வந்ததால், நண்பருடன் சேர்ந்து போலி சான்றிதழ் தயாரிப்பதை முழுநேர தொழிலாக மாற்றியதும் தெரியவந்தது. 

சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் கொரோனா பரிசோதனை மையம் நடத்தி வருகிறார் 30 வயதான ஹரிஷ்பர்வேஸ். ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் கொரோனா ‛நெகட்டிவ்’ சான்றிதழ் வழங்கப்படும் என்கிற விளம்பரம் காட்டுத்தீயாய் வாட்ஸ்ஆப்பில் பரவியது. இதைக்கண்ட ஹரிஷ், அதிலிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வேண்டும் என கேட்டுள்ளார். ‛கொடுத்திடலாம் சார்... 500 அனுப்புங்க... சார்பிகேட் வாங்குங்க...’ என ரொம்ப கேஷூவலாக அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறிய ஆன்லைன் முறையில் ரூ.500யை அவர்களுக்கு அனுப்பினார் ஹரிஷ்பர்வேஸ். அடுத்த அரை மணி நேரத்தில் எந்த சோதனையும் செய்யாமல், போலியான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வாட்ஸ்ஆப் மூலம் ஹரிஷ்பர்வேஸிற்கு வந்து சேர்ந்தது. அதை கண்ட அவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அப்படியே அச்சு அடித்தார் போல அசலைப் போலவே, நகலும் கடுமையாக இருந்தது. இதைக் கண்டு கொதித்துப் போன அவர், உடனே வடக்கு கடற்கரை போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார், மொபைல் போன் எண்ணை வைத்து, சம்மந்தப்பட்ட நபர் இருக்கும் இடத்தை ட்ராக் செய்தனர். 


ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்: குள்ளநரி ‛குருவி’ சிக்கியது!

அதன் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணியில் சர்பிகேட் சர்வீஸ் செய்து கொண்டிருந்த 29 வயதான இன்பர்கான் என்பவரை கை செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், வெளிநாட்டிலிருந்த தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் குருவியாக அவர் செயல்பட்டதும், வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்பதால், அதற்கான போலி சான்றிதழை தயாரித்து அதில் நல்ல வருவாய் பார்த்து வந்ததும் தெரியவந்தது. ஒரு கட்டத்தில் நல்ல வருவாய் வந்ததால், நண்பருடன் சேர்ந்து போலி சான்றிதழ் தயாரிப்பதை முழுநேர தொழிலாக மாற்றியதும் தெரியவந்தது. 

தனியார் கொரோனா மையத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக நெகட்டிவ் சான்றிதழ் தயாரித்து, இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு வினியோகம் செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக வெளிநாடு செல்லும் குருவிகள் பலரும் இவரது போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget