மேலும் அறிய

'போலீசை கடித்துக்குதறிய கஞ்சா விற்பனை குற்றவாளிகள்' : ராமநாதபுரத்தில் பரபரப்பு..!

போலீசின் கையை  கடித்து குதறிவிட்டு  தப்ப முயன்ற கஞ்சா விற்ற ரவுடிகள்  4 பேரில்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகன் சிக்கினார் தாய் தப்பியோட்டம்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே பிடிக்கச்சென்ற போலீசின்  கையை கடித்துவிட்டு தப்ப முயன்ற கஞ்சா ரவுடிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்தனர்.  உச்சிப்புளி அருகே இருமேனி கடற்கரையில், ஒரு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உச்சிப்புளி சார்பு ஆய்வாளர் நாகநாதன் தலைமையில் இரண்டு காவலர்கள் உட்பட மூன்று  போலீசார் தேடிச்சென்றனர்.  இவர்கள் தேடிச்சென்ற  குற்றவாளிகளான மரவெட்டிவலசை பிரஷாத், காளிதாஸ்,ரஞ்சித் மற்றும் காளிதாஸின் தாய் சந்திரா உள்ளிட்ட நான்கு பேரும் அப்பகுதியில்  கஞ்சா விற்பனையில் மும்முரமாக  ஈடுபட்டிருந்தனர். 

போலீசை கடித்துக்குதறிய கஞ்சா விற்பனை குற்றவாளிகள்' : ராமநாதபுரத்தில் பரபரப்பு..!
இவர்கள் வருவதை கண்டு தப்பியோட முயன்ற அவர்களை, பிடிக்கச்சென்ற போலீசார் ரமேஷ், ஜெகதீஸ்ரன் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை விடவில்லை. அவர்களை துரத்தி  விரட்டி பிடித்ததும் போலீசுக்கு கொஞ்சங்கூட அஞ்சாத அவர்கள் போலீசாருடன் மல்லுக்கட்டி தப்பிக்கப்பார்த்தனர். ஆனால் போலீசாரின் பிடி இறுகியது. இதனால், அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க இரண்டு போலீசாரின் கைகளையும் தனது பற்களால் பலமாக கடித்துள்ளனர். இதில் வலி தாங்க முடியாமல் போலீசாரில் ஒருவர் அலறித்துடித்துள்ளார். வலியில் துடித்தாலும் கூட குற்றவாளிகளை விடவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக நான்கு பேரில் இரண்டு பேரை பிடித்துவிட்டனர்.

போலீசை கடித்துக்குதறிய கஞ்சா விற்பனை குற்றவாளிகள்' : ராமநாதபுரத்தில் பரபரப்பு..!
காளிதாஸின் தாய் சந்திராவும், ஆக்கிடாவலசை ரஞ்சித் ஆகிய  இருவரும்  தப்பித்த நிலையில், அப்பகுதியில் அவர்கள் வைத்திருந்த அட்டை பெட்டியை கைப்பற்றினர். பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் 5 பண்டல்களில் தலா நாலே கால் கிலோ வீதம் 21 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து பிரஷாத் (23), காளிதாஸ் (20) ஆகிய இருவரையும்  கைது செய்தனர். கைப்பற்றிய கஞ்சா பண்டல்கள் மீதான வழக்கை பதிவு செய்த  இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார், இவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா மொத்தமாக கிடைக்கிறது இலங்கைக்கு கஞ்சா கடத்தும்  கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

போலீசை கடித்துக்குதறிய கஞ்சா விற்பனை குற்றவாளிகள்' : ராமநாதபுரத்தில் பரபரப்பு..!
தற்போது கைதான இருவர் மீதும் வழிப்பறி, திருட்டு, கஞ்சா வழக்குகள் உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இருவரையும் குண்டாசில் அடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.  காயமடைந்த போலீசார் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் நேரில் சென்று  நலம் விசாரித்துள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget