மேலும் அறிய

தஞ்சை: ஓட்டையை போட்டு அடகு கடையில் ஆட்டையை போட நினைத்தவர்களுக்கு ஆப்பு வைத்த அலாரம்!

தஞ்சை அருகே மருங்குளத்தில் அடகு கடை சுவற்றில் ஓட்டையை போட்டு ஆட்டையை போடலாம் என்று நினைத்தவர்களுக்கு ஆப்பு வைத்தது அலாரம். இதனால் மக்கள் துரத்த, ஓட்டம் பிடித்துள்ளனர் மர்மநபர்கள்.

தஞ்சை அருகே மருங்குளத்தில் அடகு கடை சுவற்றில் ஓட்டையை போட்டு ஆட்டையை போடலாம் என்று நினைத்தவர்களுக்கு ஆப்பு வைத்தது அலாரம். இதனால் மக்கள் துரத்த, ஓட்டம் பிடித்துள்ளனர் மர்மநபர்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கொல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தஞ்சை அருகே மருங்குளம் நால்ரோடு பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாக இவரது கடை இங்கு செயல்பட்டு வருகிறது. இவரது அடகுகடையில் மருங்குளம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் நகைகளை அடகு வைத்து மீட்பது வழக்கமான ஒன்று. இந்த அடகுக்கடைக்கு அடுத்த கடையில் செந்தில் குமார் என்பவர் மெடிக்கல் ஷாப் வைத்துள்ளார். இருவரது கடைகளும் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

 


தஞ்சை: ஓட்டையை போட்டு அடகு கடையில் ஆட்டையை போட நினைத்தவர்களுக்கு ஆப்பு வைத்த அலாரம்!

வழக்கம் போல் நேற்று இரவு ரவிச்சந்திரனும், செந்தில்குமாரும் தங்களின் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்படனர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐந்துக்கும் அதிகமான மர்மநபர்கள் மெடிக்கல் ஷாப் கதவின் பூட்டை உடைத்து அதன் உள்ளே புகுந்துள்ளனர். அவர்களின் இலக்கு மெடிக்கல் ஷாப் அல்ல. பக்கத்தில் உள்ள அடகு கடைதான். பின்னர் மெடிக்கல் ஷாப் வழியாக அடகு கடைக்கு சுவற்றில் உளியை வைத்து அதிகம் சத்தம் வராமல் ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியேறும் வகையில் ஓட்டை போட்டுள்ளனர்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து அந்த ஓட்டை வழியாக மர்மநபர்கள் அடகு கடைக்கு உள்ளே புகுந்து ஆஹா அள்ளிடலாம் என்று ஆசையோடு அங்கிருந்த இரும்பு லாக்கரை திறக்க முயற்சி செய்ய ஆப்பு வைத்தது அலாரம். உய்ங்ங்ங்ன்னு கத்தி ஊரை கூட்டியது அலாரத்தின் சத்தம். அவ்வளவுதான் சிக்கினால் செம மாத்துதான் என்று வந்த ஓட்டைக்குள்ளேயே அவசரம், அவசரமாக புகுந்த மெடிக்கல் ஷாப்பிற்குள் வந்துள்ளனர் மர்ம நபர்கள். கிடைத்த வரை லாபம் என்று மெடிக்கல் ஷாப் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் ஒரு லேப்டாப்பை தூக்கிய மர்ம கும்பல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தது.

 


தஞ்சை: ஓட்டையை போட்டு அடகு கடையில் ஆட்டையை போட நினைத்தவர்களுக்கு ஆப்பு வைத்த அலாரம்!


இதற்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருந்ததால் பரபரப்பாக திரண்ட பொதுமக்கள் கடை நோக்கி வர சாப்பாட்டு மூட்டைக்குள் ஒளிந்திருந்த எலி போல மர்ம நபர்கள் மெடிக்கல் ஷாப்பில் இருந்து தாண்டிக்குதித்து ஓட ஆரம்பித்துள்ளனர். டேய் யார்றா அது என்று பொதுமக்கள் கத்திக் கொண்டே பின்னால் துரத்த மாட்டினால் மாத்துதான் என்று மர்ம கும்பல் வேக வேகமாக ஓட தொடங்கி உள்ளது. இடையில் சாலையின் ஓரத்தில் இருந்த கற்களை எடுத்து துரத்தும் பொதுமக்களை நோக்கி வீசியது. மேலும் கையில் இருந்த லேப்டாப்பையும் வீசிவிட்டு தப்பியது அந்த மர்ம கும்பல்.

இதில் துரத்தி சென்றவர்களில் ஸ்ரீராம் என்பவருக்கு கல் ஒன்று தாக்கவே அவர் காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வல்லம் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து வல்லம் டிஎஸ்பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் மெடிக்கல் ஷாப் மற்றும் அடகு கடை ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலாரம் அடித்ததால் அடகுக்கடையில் இருந்த பல லட்சம் மதிப்பு நகைகள் தப்பி உள்ளது. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
Embed widget