![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime : தொடர்ச்சியான அழைப்பு.. பிறந்தநாளன்று வரமறுத்த மனைவி.. விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட நபர்..
பிறந்தநாள் அன்று தன்னைப்பார்க்க வரவில்லை விரக்தியில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Crime : தொடர்ச்சியான அழைப்பு.. பிறந்தநாளன்று வரமறுத்த மனைவி.. விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட நபர்.. Pallavaram: 39 year old Private Employee commits suicide after his wife did not turn up on his Birthday Crime : தொடர்ச்சியான அழைப்பு.. பிறந்தநாளன்று வரமறுத்த மனைவி.. விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட நபர்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/04/4632579d9f50a4d74960cd864cbf9de31664852071583224_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கணவன் -மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை வருவது வழக்கம். இந்த பிரச்னை ஒரு சில நேரங்களில் தற்கொலை வரை சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. தன்னுடைய பிறந்தநாளில் தன்னை பார்க்க மனைவி வரவில்லை என்று கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்லாவரத்தை அடுத்த பெருமாள் நகரில் வசித்து வந்தவர் ஜெய் கிருஷ்ணன்(39). இவருக்கு இந்துமதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளது. ஜெய் கிருஷ்ணன் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக இந்துமதி தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜெய்கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது. பிறந்தநாளன்று அலுவலகம் சென்றுவந்த பிறகு தன்னை பார்க்க குழந்தைகளுடன் வருமாறு அவர் தன்னுடைய மனைவி இந்துமதியிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் அவர் கணவர் ஜெய்கிருஷ்ணன் மீது இருந்த கோபத்தால் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார்.
அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் கணவரிடமிருந்து எந்தவித தொலைபேசி அழைப்பும் வராததால் அவர் சந்தேகம் அடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்துமதி தன்னுடைய குழந்தைகளுடன் கணவர் இருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த வீடு உள் பக்கமாக பூட்ட பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வீட்டை உடைத்து பார்த்த போது கணவர் ஜெய்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அவருடைய உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்தநாளில் தன்னை பார்க்க மனைவி வராததால் கணவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..?
இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணங்கள் :
தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் :
மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)
அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)