மேலும் அறிய

லிவ் இன் பார்ட்னருக்கு நித்தம் ஒரு சித்திரவதை! கொடுமை செய்த கேரள இளைஞர் கைது!

திருமணம் செய்து மனைவியை கொடுமை செய்த செய்திகளை தான் நாம் கேட்டிருபோம். ஆனால் இந்தச் செய்தி லிவ் இன் பார்ட்னரை தினம் தினம் வதை செய்த இளைஞரைப் பற்றியது.

திருமணம் செய்து மனைவியை கொடுமை செய்த செய்திகளை தான் நாம் கேட்டிருபோம். ஆனால் இந்தச் செய்தி லிவ் இன் பார்ட்னரை தினம் தினம் வதை செய்த இளைஞரைப் பற்றியது.

கேரள மாநிலம் பாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரயில் ஹரிகிருஷ்ணன். இவருக்கு 24 வயதாகிறது. இவர் ட்ரெட்ஜ் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவர் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி அவர் தனது கணவரைப் பிரிந்திருந்தார். இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி அந்தப் பெண்ணிடம் தனது காதலைச் சொல்லியுள்ளார் ஹரிகிருஷ்ணன். நீண்ட கால தயக்கத்திற்குப் பின்னர் ஹரிகிருஷ்ணன் தன் மீது காட்டிய ஆர்வத்தால் அந்தப் பெண்ணும் அவருக்கு சம்மதம் சொல்லியுள்ளார். இருவரும் காதலர்களாக மாறியவுடன் ஹரிகிருஷ்ணன் திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்துள்ளார். இதனை அந்தப் பெண்ணும் நம்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் அந்தப் பெண்ணும், ஹரிகிருஷ்ணனும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். டிசம்பர் 2021ல் அந்தப் பெண் கர்ப்பமானார்.

அப்போதிலிருந்து ஹரி கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிந்துள்ளது. அவரிடம் பலமுறை கேட்டும் சரியாக அவர் பதில் சொல்லவில்லை. ஆனால், தன்னை விடுத்து நர்சிங் மாணவி ஒருவரை ஹரிகிருஷ்ணன் காதலித்து வந்ததை அந்தப் பெண் தெரிந்து கொண்டார். உடனே ஹரிகிருஷ்ணனிடம் சண்டையிட்டுள்ளார். அப்போது ஹரிகிருஷ்ணன் ஆம் உண்மைதான் நான் அந்தப் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பகிரங்கமாகவே சொல்லியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன் பின்னர் ஹரிகிருஷ்ணன் அப்பெண்ணை அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார். அவரின் கொடுமைகள் பொறுக்க முடியாமல் மாநில மகளிர் ஆணையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். வீட்டில் தங்க பயந்து கொண்டு வண்டன்பாதல் மடத்தில் குழந்தையுடன் தஞ்சம் புகுந்தார்.


லிவ் இன் பார்ட்னருக்கு நித்தம் ஒரு சித்திரவதை! கொடுமை செய்த கேரள இளைஞர் கைது!

இதை அறிந்து கொண்ட ஹரிகிருஷ்ணன் அங்கு சென்று அப்பெண்ணிடம் நயந்து பேசி. குழந்தையைக் கொஞ்சி, அவருக்கு நம்பிக்கை விதைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணை ஓரிரு நாட்களிலேயே மீண்டும் கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார் ஹரிகிருஷ்ணன். இந்த முறை அப்பெண் மாவட்ட துணை எஸ்.பி. ஷாஜு ஜோஸிடம் புகார் கொடுத்தார். அவருக்கு சம்மன் அனுப்பப்பட அவரோ காவல்நிலையத்திற்கு வரவே இல்லை.

உடனே காவல்துறை அப்பெண்ணையும் குழந்தையையும் மஹிளா மந்திரத்தில் தங்க வைத்தனர். இதனைத் தெரிந்து கொண்ட ஹரி கிருஷ்ணன் அப்பெண்ணுக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பி திருமணம் செய்து கொள்கிறேன். மார்ச் 3 ஆம் தேதி நேரில் வரவும் என்று குறிப்பிட்டுள்ளார். இதை நம்பி அப்பெண் கொழுவனல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் ஹரி கிருஷ்ணன் வழக்கம்போல் எஸ்கேப் ஆனார்.

அவர் மீண்டும் போலீஸில் புகார் கொடுக்க போலீஸார் ஹரிகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். 2021 டிசம்பர் தொடங்கி மூன்று மாதங்களில் ஹரிகிருஷ்ணன் அப்பெண்ணை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிக மோசமாக கொடுமை செய்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget