மேலும் அறிய

Delhi - Jaipur Accident : டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை விபத்து.. ஒருவர் மரணம்.. 15 பேர் படுகாயம்.. என்ன நடந்தது?

பேருந்து பின்னால் இருந்து டிரக் மீது மோதியதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளனர்

வியாழன் அதிகாலை அன்று டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், பதினைந்து பயணிகள் காயமடைந்தனர். பினோலா கிராமத்திற்கு அருகே அதிகாலை ஐந்தரை மணியளவில் முப்பது பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து பின்னால் இருந்து டிரக் மீது மோதியதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது என பிடிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான பேருந்து ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே பேருந்து ஓட்டுநர் பிரவீன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

லோட் லாரியின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதன் காரணமாகவே பஸ் வண்டியின் மீது மோதியதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.


Delhi - Jaipur Accident : டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை விபத்து.. ஒருவர் மரணம்.. 15 பேர் படுகாயம்.. என்ன நடந்தது?

இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையிலான போலீஸ் குழு, பிலாஸ்பூர் காவல் நிலையத்தின் எஸ்.எச்.ஓ மற்றும் தீயணைப்பு படை குழுவினர் ஆகியோர் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இரு வாகனங்களுக்கு இடையே சிக்கிய பஸ் டிரைவரை இந்தக் குழுவினர் வெளியே எடுத்தனர்.

டிரக் ஓட்டுநருக்கு எதிராக பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 279 அடிப்படையில் வாகனம் ஓட்டுதல், 304A  அலட்சியத்தால் மரணம் ஆகிய சட்டப்பிரிவின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எஸ் ஹெச் ஓ நமக்குத் தகவல் பகிர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகின்றன.

 

முன்னதாக இதே போன்ற வேறு ஒரு நெடுஞ்சாலை விபத்தில் பரோடா பெண்கள் க்ரிக்கெட் அணி நூலிழையில் உயிர்தப்பியது குறிப்பிடத்தகது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டி20 போட்டிக்குப் பிறகு வீராங்கனைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாடி செட்லபாலம் தேசிய நெடுஞ்சாலையில், அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vadodara 🔵 (@vadodara_click)

குழு மேலாளருடன் சேர்த்து குறைந்தது ஐந்து வீராங்கனைகள் காயங்களுக்குள்ளானதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சரபாளையம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Embed widget