மேலும் அறிய

மயிலாடுதுறை: கொத்தாக மாட்டிய கஞ்சா பொட்டலங்கள்: சிறுவர்கள் உட்பட 9 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!

சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை குறித்து பல புகார்கள் வந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கஞ்சா விற்பனை குறித்து சோதனையில் ஈடுபட்டனர். 


மயிலாடுதுறை: கொத்தாக மாட்டிய கஞ்சா பொட்டலங்கள்: சிறுவர்கள் உட்பட 9 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!

அப்பொழுது சந்தேகத்தின் பேரில் சீர்காழி புறவழிச் சாலையில் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த காரில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து காரில் இருந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சிதம்பரத்தை சிதம்பரத்தை சேர்ந்த கஞ்சா மொத்த வியாபாரியான மனோஜ் என்பது தெரியவந்தது. இதனை எடுத்து காரில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் அளித்த தகவலின் பேரில் சில்லறை விற்பனைகள் ஈடுபட்டிருந்த சீர்காழியை கஞ்சா வியாபாரிகளான தேவேந்திரன், ராஜா, ஆதிகேசவன், அவினாஷ், வினோத் உள்ளிட்ட 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். 


மயிலாடுதுறை: கொத்தாக மாட்டிய கஞ்சா பொட்டலங்கள்: சிறுவர்கள் உட்பட 9 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் மூன்று  சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து ஐந்து கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை நேரில் பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட சீர்காழி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட தனி படையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் கண்காணிப்பாளர் நிஷா கூறியதாவது:


மயிலாடுதுறை: கொத்தாக மாட்டிய கஞ்சா பொட்டலங்கள்: சிறுவர்கள் உட்பட 9 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!

சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தற்போது வரை 9 பேர் கைது செய்யப்பட்டு ஐந்து கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் சோதனை தொடர்ந்து நடைபெறும் பொதுமக்கள் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் தெரிவிப்பதற்காக பிரத்தியோக  whatsapp எண் (9442626792) அறிவிக்கப்பட்டுள்ளது.


மயிலாடுதுறை: கொத்தாக மாட்டிய கஞ்சா பொட்டலங்கள்: சிறுவர்கள் உட்பட 9 பேரை தட்டித் தூக்கிய காவல்துறை!

அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 04364 211600  என்கிற எண்ணிலும் தொடர்பு கொண்டு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவரின் பற்றிய விபரம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு மாவட்டத்தில் 56 பேர் குண்டர் காவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  60 கஞ்சா விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டதாக 3284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,420 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget