மேலும் அறிய

அரியலூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது

’’குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது’’

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாந்தா (30). இவர், 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து சிறுமியை, அவரது பெற்றோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து சென்ற சாந்தா, அந்த சிறுமியை, கீழப்பழுவூரை சேர்ந்த சந்திரா (30) என்ற பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சந்திரா, அந்த சிறுமியை கீழப்பழுவூர், வி.கைகாட்டி, செந்துறை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று, சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, சிலருடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார் என்பதும், இதற்கு சாந்தா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
 

அரியலூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
 
இதையடுத்து சாந்தா, சந்திரா மற்றும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தஞ்சை கீழவாசல் பாம்பாட்டி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் வினோத் (29), வி.கைகாட்டி முத்துவாஞ்சேரி சாலை உரக்கடை தெருவை சேர்ந்த செந்தில் மகன் பிரேம் (29), நாகமங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் பாலு என்ற பாலச்சந்தர் (27), செந்துறை மணப்பத்தூர் மேலத்தெருவை சேர்ந்த தங்கும் விடுதி மேலாளர் தனவேல் (58), பாலியல் தொழிலில் சந்திராவுக்கு உதவியதாக கீழப்பழுவூர் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிக்கண்ணன் (37), திருமானூர் தெற்கு தெருவை சேர்ந்த தெய்வீகன் (49), சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு தான் பராமரித்து வரும் வணிக வளாகத்தில் இடம் கொடுத்ததாக கீழப்பழுவூரை சேர்ந்த ராஜேந்திரன் (62) ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தனியார் தங்கும் விடுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவரையும், தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் பாலாஜி என்பவரையும் என 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த சிறுமி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
 

அரியலூரில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
 
மேலும் சிறுமி உடல் நலிந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிறுமியின் பெற்றோர், மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் காவல்துறை துணை சூப்பிரண்டு கலைகதிரவன், துணை சூப்பிரண்டு (பயிற்சி) சங்கர் கணேஷ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுமதி, உடையார்பாளையம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் உள்ளிட்ட காவல் துறையினர் மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, சிறுமியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்படைய செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget