மேலும் அறிய

நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்; கழுத்தை நெரித்து கொன்ற மகள்!

நீட் தேர்வுக்குத் தயாராகக் கட்டாயப்படுத்திய்யதால் விரக்தியடைந்த மகள், தனது தாயைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வுக்குத் தயாராகக் கட்டாயப்படுத்திய்யதால் விரக்தியடைந்த மகள் தனது தாயைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை ஐரோலி செக்டார்- 7 பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 6 வயதில் மகனும் இருக்கின்றனர். மகளை மருத்துவராக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருந்துள்ளது. மகளுக்கு மருத்துவக் கனவு இல்லை. ஆனால், தம்பதி மகளின் கருத்துகளுக்கு செவிகொடுக்கவில்லை. 15 வயதே நிரம்பிய மகளை, இப்போதிருந்தே நீட் தேர்வுக்கு ஆயத்தமாகு எனக் கூறி நீட் பயிற்சி மையத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி அந்த சிறுமி செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, இதை அவளது தந்தை கண்டித்துள்ளார். படிக்காமல் மொபைல் ஃபோன் பார்க்கிறாயே எனக் கடிந்துள்ளார். இதனால் சிறுமி மன உளைச்சலுக்கு உள்ளானார். அப்பா, அம்மாவிடம் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றார்.

இதையடுத்து அங்கு சென்ற தாய், வீட்டுக்கு வரும்படி மகளை அழைத்தார். ஆனால் சிறுமி வீடு திரும்ப மறுத்துள்ளார். நீ்ட் தேர்வுக்கு படிப்பதற்காக கட்டாயப்படுத்துவதால் தான் வெறுப்படைந்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், "என்னை நீங்கள் கட்டாயப்படுத்தி நீட் தேர்வுக்குப் படிக்க வைக்கிறீர்கள் எனப் போலீஸில் புகார் அளித்துவிடுவேன்" என்றும் மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய், மகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாரிடம் விவரத்தை தெரிவித்தார். போலீஸார் சிறுமி மற்றும் பெற்றோருக்கு மனநல ஆலோசனை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 30-ஆம் தேதி சிறுமியின் தாயின் போனில் இருந்து அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்றது. அதில் 'நான் விடைபெறுகிறேன்' என்று கூறப்பட்டு இருந்தது. 


அந்தத் தகவல் பறந்த சிறிது நேரத்திலேயே, சிறுமி தந்தைக்கு போன் செய்து, "அப்பா, ரொம்ப நேரமா அம்மா கதவைத் திறக்க மறுக்கிறார். எனக்கு பயமாக இருக்கிறது" என்று கூறினாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக உறவினருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்கும்படி தெரிவித்தார். உறவினர் அங்கு சென்று பார்த்தபோது, வெளிப்புறமாக வீடு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்த பெண் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் பெண்ணின் கழுத்தில் கராத்தே பெல்ட் சுற்றியபடி இருந்தது.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பெண்ணின் தலையில் காயம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. ஏற்கெனவே தாயும், மகளும் காவல்நிலையத்துக்கு வந்ததும், அவர்களுக்குக் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதும் போலீஸார் நினைவில் பொரிதட்டியது.
சிறுமியிடம் லாவகமாகப்  பேச்சுக்கொடுத்து நடந்த விவரத்தை கூறும்படி கேட்டனர். அப்போது தாயைக் கொலை செய்து விட்டு, உண்மையை மறைக்க முயன்றதாக சிறுமி ஒப்புக்கொண்டார்.

சிறுமி கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்:

"அன்றைக்கு நானும், அம்மாவும் தான் வீட்டில் இருந்தோம். அப்போ ஆஃபீஸ் போய்விட்டார். அப்போது அம்மாவுக்கும் எனக்கும் படிப்பு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அம்மா, ஆத்திரப்பட்டு உச்சத்தில் கத்தினார். கத்தியை எடுத்துவந்து மிரட்டினார். எங்கே என்னைக் கொலை செய்துவிடுவாரோ என்று எனக்குப் பயம் வந்துவிட்டது. அம்மா கிட்ட வந்தபோது அவரைத் தள்ளிவிட்டேன். அவர் பின்னால் விழுந்தார். அருகிலிருந்த சோஃபாவில் அம்மாவின் தலை முட்டியது. அம்மா அப்படியே மயங்கிப் போனார். எங்கே எழுந்தவுடன் தள்ளிவிட்டதற்கும் சேர்த்து கோபப்படுவாரோ என்று அச்சம் ஏற்பட்டது. அதனால், அம்மாவை கொலை செய்துவிடலாம் என்று தோன்றியது. கராத்தே பெல்ட்டை எடுத்து அம்மாவின் கழுத்தை நெரித்துவிட்டேன். அப்புறம் நானே அப்பாவுக்கு அம்மா ஃபோனிலிருந்து மெசேஜ் அனுப்பினேன். அம்மா கதவைத் திறக்கவில்லை என்று கூறினேன்" என்று சிறுமி கூறினார்.


நீட் தேர்வுக்கு கட்டாயப்படுத்திய தாய்; கழுத்தை நெரித்து கொன்ற மகள்!

சிறுமியின் வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதோடு பெற்றோரின் நிர்பந்தம் எந்த அளவுக்கு ஒரு குழந்தையின் ஆத்திரத்தைத் தூண்டியிருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. சிறுமி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மீதான குற்றம் உறுதியானால் அவர் கூர்நோக்குப் பள்ளிக்கு அனுப்பபடுவார்.

வெறுப்பதை நீங்கச் சொல்லு..

பட்டாம்பூச்சி போல் சிறகடித்து வாழ வேண்டிய காலக்கட்டத்தில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் செல்லவிருக்கிறாள் இந்தச் சிறுமி. இதற்கு முக்கியக் காரணம் பெற்றோர் தான். அவர்கள் மட்டும் சிறுமியை நிர்பந்திக்காவிட்டால் இப்படியொரு சம்பவம் நடந்திருக்காமல் இருந்திருக்கலாம்.
பிடித்ததை வாங்கச் சொல்லு.. வெறுப்பதை நீங்க சொல்லு.. என்ற பாணியில் உங்களின் குழந்தைகளை வாழ விடுங்கள். மருத்துவம் மட்டுமே படிப்பல்ல. கல்வியில் மட்டுமல்ல வேறு எந்த விஷயத்திலும் குழந்தைகளை நிர்பந்திக்காதீர்கள். "குழந்தைகள் எப்போதும் கட்டளைகளை ஏற்று நடக்க மாட்டார்கள், மாறாக அவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள். இந்த குறிப்பிட்ட வழக்கில் சிறுமி தனது தாயின் கோபத்தை, ஆத்திரத்தை, கொலை மிரட்டல் குரல்களைப் பார்த்து அதிர்ந்து போய் கடைசியில் அதையே தானும் பின்பற்றியுள்ளார்" எனக் கூறுகிறார் மனநல நிபுணர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
ABP Premium

வீடியோ

வெனிசுலாவில் நிலவும் நெருக்கடிமோசமான சிறையில் மதுரோ போரை தொடங்குகிறாரா ட்ரம்ப்? | America Trump Vs Venezuela
America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramadoss vs Anbumani : அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
அதிமுக - பாமக கூட்டணி செல்லாது.! அன்புமணிக்கு ஷாக்- ராமதாஸ் பரபரப்பு அறிக்கை
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
Gold Rate Reduced Jan.7th: ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
ட்விஸ்ட் அடித்த தங்கம்; காலையில் விலை உயர்ந்து மாலையில் குறைந்தது; எவ்ளோ குறைஞ்சுருக்கு தெரியுமா.?
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
அரசு உதவிப் பேராசிரியர் தேர்வு.. ஜன.13 கடைசி! செக் வைத்த டிஆர்பி- தவறுகளை சரிசெய்யலாம்!
Chennai Power Cut: சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜனவரி 8-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை எற்படப் போகுதுன்னு தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
’DMK FILES’ - முக்கிய ஆதாரத்தோடு டெல்லிக்கு புறப்படும் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவின் செம பிளான்
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Top Brands Budget Cars: டாப் 5 ப்ராண்ட்களின்.. கம்மி விலை கார்கள்.. பட்ஜெட் மாடல்கள், மைலேஜில் எப்படி? - முழு விவரம்
Embed widget