வெட்டப்பட்ட தலையுடன் காவல்நிலையம் வந்த பெண் - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்
நாகையில் திருடப்பட்ட ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகையில் காணாமல் போன ஆட்டினை கறிக்கடையில் கண்டெடுத்த பெண்மணி ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
பொய்கைநல்லூர் பூங்கொடி
நாகப்பட்டினம் மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதான பூங்கொடி. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று காணாமல் போய் உள்ளது. அதனை தொடர்ந்து வழக்கமாக தனது ஆடுகள் சென்று மோய்ந்து வரும் இடங்கள் மற்றும் இன்ன பிற பல்வேறு பகுதிகளில் தேடி அலைந்துள்ளார் பூங்கொடி.
ஆனால் எங்கு தேடியும் தனது ஆடு கிடைக்காததால், ஆடு திருடு போனதை அவர் உணர்ந்தார். அதனை அடுத்து ஆட்டினை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்று எண்ணியுள்ளார். கத்திரிக்காய் முற்றினால், சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும் என்ற பழமொழியை அறிந்த அவர், தனது ஆடு எப்படியும் கசாப்பு கடையில் தான் இருக்கும் என்பதை யூகித்து கொண்டார்.
கறிக்கடையில் தொங்கிய ஆடு
தொடர்ந்து அருகில் உள்ள கல்லார் பகுதியில் உள்ள ஒரு ஆட்டிறைச்சி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு தனது ஆடு வெட்டப்பட்டு தலை தனியாக, உடல் தனியாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை பார்த்து கோபமடைந்த பூங்கொடி கசாப்பு கடைக்காரரான செய்யது அகமதுவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தனது ஆட்டின் தலையையும், உடலையும் பூங்கொடி கேட்டுள்ளார். அதனை தர மறுத்த செய்யது அகமது, பூங்கொடியை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Annamalai to Delhi: டீல் ஓகே வா.? டெல்லி சென்ற அண்ணாமலை.. தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு...
ஆட்டுத்தலையுடன் காவல்நிலையத்தில் புகார்
இதைத் தொடர்ந்து அந்த ஆட்டின் தலையை கடையில் இருந்து பறித்து எடுத்துக்கொண்டு பூங்கொடி அங்கிருந்து நாகப்பட்டினம் டவுன் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். கையில் ஆட்டின் தலையுடன் பெண் வருவதை பார்த்த போலீசார் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் நாகை டவுன் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் வழக்குப்பதிவு செய்து கறிக்கடை கடைக்காரரான செய்யது அகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Trump on TIKTOK: சீனா அந்த விஷயத்த பண்ணா வரிய குறைக்கறேன்.. ட்ரம்ப் போட்ட ‘அந்த‘ கன்டிஷன் என்ன.?
நாகையில் பரபரப்பு
காணாமல் போன ஆடு திருடப்பட்டு வெட்டப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கவந்த பெண்மணி அடையாளம் காட்டுவதற்காக வெட்டப்பட்ட ஆட்டின் தலையுடன் காவல்நிலையத்திற்கு வந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

