மேலும் அறிய

7 அடுக்கு பாதுகாப்புகளை மீறி, விமான நிலையத்தில் சுற்றி திரிந்த நபர்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?

" விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள், மர்ம ஆசாமியை மடக்கிப்பிடித்து, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைப்பு "

ஏழு அடுக்கு பாதுகாப்பு
 
சென்னை விமான நிலையத்தில் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஏழு அடுக்கு பாதுகாப்பை  தாண்டி, இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்து, சுமார் 4 மணி நேரம் உள்ளே சுற்றியதோடு, குடியுரிமை அலுவலக ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றதாக கூறப்படுகிறது, குடியுரிமை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், சம்பந்தப்பட்ட நபரை பிடித்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7 அடுக்கு பாதுகாப்புகளை மீறி, விமான நிலையத்தில் சுற்றி திரிந்த நபர்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
 
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், ஏழாம் எண் கேட் வழியாக, நேற்று மாலை 6 மணி அளவில், இளைஞர் ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அந்த இளைஞரிடம் விமான டிக்கெட், அல்லது உள்ளே நுழைவதற்கான சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லை. ஆனாலும் அந்த ஏழாம் எண் கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளைத் தாண்டி அந்த இளைஞர் வந்துள்ளார்.
 
உள்ளே சுற்றித்திரிந்த இளைஞர்
 
இந்த நிலையில் அந்த இளைஞர் உள்ளே சென்று பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளை கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் கவுண்டர் பகுதி வரை சென்று, அங்கு சுற்றி அலைந்து கொண்டிருந்தார். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்டலிஜென்ட் அதிகாரிகளோ, அந்த இளைஞரை கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த இளைஞர், நேற்று இரவு 10 மணியளவில் குடியுரிமை அலுவலக கவுண்டர் பகுதியில் நின்று, ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது குடியுரிமை ஊழியர்கள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, சென்னை விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.

7 அடுக்கு பாதுகாப்புகளை மீறி, விமான நிலையத்தில் சுற்றி திரிந்த நபர்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
இலங்கையை சேர்ந்த நபர்
 
விமான நிலைய மேலாளர் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35). இவர் கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். சென்னை எழும்பூரில் இவர் தங்கி இருக்கிறார். மேலும் அந்த இளைஞரை சோதனை நடத்தியபோது, அவரிடம்  இரண்டு ஸ்டிக்கர்களை கைப்பற்றியுள்ளனர். இதைஅடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், கியூ பிரஞ்ச் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த இலங்கை இளைஞர் 3 மாத விசாவில், இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளதாக தெரியவந்தது. மேலும் இவர் எதற்காக, யாரைப் பார்க்க சென்னை வந்தார்? என்பது தெரியவில்லை.

7 அடுக்கு பாதுகாப்புகளை மீறி, விமான நிலையத்தில் சுற்றி திரிந்த நபர்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
 
7 அடுக்கு பாதுகாப்பு மீறல்
 
இதற்கிடையே விமான நிலையத்தில் 7  அடுக்கு பாதுகாப்பு முறை அமுலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், எந்தவிதமான ஆவணமும் இல்லாமல், இந்த  இளைஞர் எப்படி உள்ளே சென்றார்? பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், இவரை எப்படி உள்ளே அனுப்பினார்கள்?  இந்த இளைஞர் ஏற்கனவே, இதைப்போல் சென்னை விமான நிலையத்திற்குள் அடிக்கடி வந்து சென்றுள்ளாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து, பி சி ஏ எஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியன் செக்யூரிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
விழுப்புரம் அருகே நள்ளிரவில் கொடூரம்: ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
என்னங்க இப்படி ஓடுது? அரசு பேருந்து LED திரையில் வந்த விசித்திர வாசகம்! வீடியோ வைரல்..!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget