மேலும் அறிய

சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

மயிலாடுதுறையில் வெறிபிடித்த நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக நாடு முழுவதும் தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், மயிலாடுதுறையிலும் நேற்று மாலை நாயால் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரின் மையப்பகுதிகளில் வெறிபிடித்த நிலையில் சுற்றித் திரிந்த ஒரு தெருநாய், சாலையில் சென்றுகொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோரைத் துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நகரின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்

மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூறைநாடு உள்ளிட்ட இடங்களில் ஒரு தெருநாய் வெறிபிடித்த நிலையில் அங்கும் இங்கும் ஓடியுள்ளது. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைத் திடீரெனத் துரத்திச் சென்று அந்த நாய் கடித்துள்ளது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.


சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

மருத்துவமனையில் சிகிச்சை 

இதில், காலில் பலத்த காயமடைந்து, ரத்தம் சொட்டச் சொட்ட பலர் அரசு மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்தனர். சிவக்குமார் (42), தனுஸ்ரீ (17), கற்பகம் (62) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு உடனடியாக நாய்க்கடிக்குரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் வீடுகளுக்கு திரும்பினர்.

நகராட்சிக்குத் தகவல் மற்றும் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்தது. அதன் பேரில், நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் விரைந்து மருத்துவமனைக்கு வந்து, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், வெறிபிடித்த நாயைப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வரவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.


சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறையில் தெருநாய்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்று தெருநாய்கள் மனிதர்களைத் தாக்குவது ஒருபுறம் இருக்க, போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளைத் துரத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) அறுவை சிகிச்சை

எனவே, நகரின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அவற்றுக்குப் பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெறிபிடித்த நிலையில் காணப்படும் நாய்களை அடையாளம் கண்டு, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

சிறுத்தை நடமாட்டம் 

மேலும் கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருந்தபோதே இந்தளவுக்கு அச்சப்படாத மயிலாடுதுறை மக்கள் தற்போது சிறுத்தையைவிட நாய்களை கண்டு அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Embed widget