மேலும் அறிய

சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

மயிலாடுதுறையில் வெறிபிடித்த நாய் கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக நாடு முழுவதும் தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், மயிலாடுதுறையிலும் நேற்று மாலை நாயால் நிகழ்ந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரின் மையப்பகுதிகளில் வெறிபிடித்த நிலையில் சுற்றித் திரிந்த ஒரு தெருநாய், சாலையில் சென்றுகொண்டிருந்த 20-க்கும் மேற்பட்டோரைத் துரத்திச் சென்று கடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

நகரின் மையப்பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்

மயிலாடுதுறை நகரின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, கூறைநாடு உள்ளிட்ட இடங்களில் ஒரு தெருநாய் வெறிபிடித்த நிலையில் அங்கும் இங்கும் ஓடியுள்ளது. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள், மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களைத் திடீரெனத் துரத்திச் சென்று அந்த நாய் கடித்துள்ளது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.


சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

மருத்துவமனையில் சிகிச்சை 

இதில், காலில் பலத்த காயமடைந்து, ரத்தம் சொட்டச் சொட்ட பலர் அரசு மருத்துவமனையை நோக்கிப் படையெடுத்தனர். சிவக்குமார் (42), தனுஸ்ரீ (17), கற்பகம் (62) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களுக்கு உடனடியாக நாய்க்கடிக்குரிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் வீடுகளுக்கு திரும்பினர்.

நகராட்சிக்குத் தகவல் மற்றும் நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்தது. அதன் பேரில், நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் ஆடலரசி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் டேவிட் பாஸ்கர்ராஜ் ஆகியோர் விரைந்து மருத்துவமனைக்கு வந்து, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கவும், வெறிபிடித்த நாயைப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வரவும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.


சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறையில் தெருநாய்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்று தெருநாய்கள் மனிதர்களைத் தாக்குவது ஒருபுறம் இருக்க, போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளைத் துரத்துவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தகைய தாக்குதல்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) அறுவை சிகிச்சை

எனவே, நகரின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, அவற்றுக்குப் பிறப்புக் கட்டுப்பாடு (கருத்தடை) அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெறிபிடித்த நிலையில் காணப்படும் நாய்களை அடையாளம் கண்டு, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


சிறுத்தையைக் கண்டு அஞ்சாத மயிலாடுதுறை, நாயைக் கண்டு அலறல்.

சிறுத்தை நடமாட்டம் 

மேலும் கடந்த ஆண்டு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருந்தபோதே இந்தளவுக்கு அச்சப்படாத மயிலாடுதுறை மக்கள் தற்போது சிறுத்தையைவிட நாய்களை கண்டு அச்சத்துடன் நடமாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
Embed widget