மேலும் அறிய

Crime: இரட்டை ஆண் சிசுக்களை கொன்ற தாய்... 20 நாள்களில் கழுத்தை நெரித்துக்கொன்ற கொடூரம்..

காவல் துறையினர் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, நகர் முழுவதும் சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

மத்தியப் பிரதேசத்தில் பிறந்த 20 நாள்களே ஆன இரட்டைக் குழந்தைகளை தாயே கழுத்தை நெரித்துக் கொன்று வீசியெறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன இரட்டை சிசுக்கள்

மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள டிடி நகரில் பிறந்த 20 நாள்களே ஆன இரண்டு ஆண் கடந்த செப்.23ஆம் தேதி காணாமல் போயின.

இந்நிலையில் சிதைந்த நிலையில் இந்த இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் முன்னதாக ஹபிப் கஞ்ச் பகுதியில்  நேற்று முன் தினம் (செப்.23) கண்டெடுக்கப்பட்டது. இதனை அப்பகுதி காவல் துறை உதவி ஆணையர் வீரேந்திர மிஸ்ரா முன்னதாக உறுதி செய்தார்.

வெளியான அதிர்ச்சித் தகவல்

தொடர்ந்து இந்த இரட்டைக்குழந்தைகள் கொலை செய்யப்பட்டது உறுதியான நிலையில்,
காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டனர். இந்நிலையில், இந்த இரட்டை குழந்தைகளின் தாயே குழந்தைகளைக் கொன்று வீசிய அதிர்ச்சித் தகவல் முன்னதாக வெளியாகி உள்ளது.

குழந்தைகளின் தாய் சப்னா தன் இரட்டைக் குழந்தைகளைக் கொன்று சடலங்களை ஹபீப் கஞ்ச் பகுதியில் உள்ள கட்டடத்தின் பின்புறத்தில் வீசியதும், வறுமை காரணமாக இவ்வாறு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தாய் வாக்குமூலம்

இவ்விவகாரத்தில் காவல் துறையினர் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டதோடு, நகர் முழுவதும் சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக குழந்தைகளின் உடல்களை மீட்ட காவல் துறையினர் தாய் சப்னாவிடம் மேற்கொண்ட விசாரணையின்போது இந்தக் கொலை குறித்து தெரிய வந்தது. முதலில் குழந்தைகளின் கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை கட்டிடத்தின் பின்புறத்தில் வீசியதாகவும், அப்பகுதி முழுவதும் குப்பை, புதர் மண்டி கிடப்பதால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என நினைத்ததாகவும், பின்னர் டிடி நகர் காவல் நிலையத்தில் இரட்டைக் குழந்தைகளைக் காணவில்லை என்று புகார் அளித்ததாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். 

மன நலன் பாதிப்பா?

சப்னாவின் கணவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், சப்னா மனநலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முன்னதாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இறந்த குழந்தைகளின் உடற்கூராய்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், சப்னாவை காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Crime: மேஸ்திரியின் கழுத்தை நெரித்து தூக்கில் தொங்கவிட்ட பக்கத்து வீட்டுக்காரர்... உடற்கூராய்வில் வெளிச்சத்துக்கு வந்த கொலை

Skytrax World Airline Awards 2022 : கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஏர்லைன்ஸ் பட்டியல் ! முதலிடத்தை பிடித்த ‘கத்தார் ஏர்லைன்ஸ்’!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி ! நடவடிக்கை இல்லை என பெண் காவலர்கள் ஆதங்கம்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
சென்னை ; பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை !! பரபரப்பு தகவல்
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
ABP Premium

வீடியோ

Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin warns DMK leaders : குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
கட்சியில் குழப்பம் செஞ்சா அவ்வளவு தான்.! எந்த பதவியாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்- சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
TN Election 2026: உஷார்.. இனி கூகுள் பேவும் கண்காணிக்கப்படும், ரூ.1.26 கோடி பறிமுதல்- அதிரடி காட்டிய அர்ச்சனா!
Iran Dubai Airport Attack: துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
துபாயை துவம்சமாக்கும் ஈரான்; பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு; அலறும் அமெரிக்கா.!
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
New Renault Duster: ரெடியா மாமே! நாளை அறிமுகமாகிறது New Renault Duster! விலை, தரம் எப்படி?
New Renault Duster: ரெடியா மாமே! நாளை அறிமுகமாகிறது New Renault Duster! விலை, தரம் எப்படி?
TVK Alliance : பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.! கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!கூட்டணிக்கு டாடா காட்டிய விஜய்- பரபரப்பு அறிக்கை
Netanyahu New Video: என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
என்னாது.! நெதன்யாகுவோட புது வீடியோவும் போலியா.?! மீண்டும் ஆதாரங்களை அடுக்கும் நெட்டிசன்கள்
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
’’மருத்துவர்களுக்கு துரோகம் செய்யும் திமுக அரசு! 751 பேருக்கு பணி மறுப்பு ஏன்?’’- புள்ளிவிவரங்களை அடுக்கிய அன்புமணி!
Embed widget