மேலும் அறிய

போதை மருந்து கொடுத்து சிறுமிகளை பலாத்காரம் செய்த மடாதிபதி: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

கர்நாடகாவின் சக்தி வாய்ந்த சமூகத்தைச் சேர்ந்த மடாதிபதி ஒருவர் மடத்தில் தங்கியிருந்த சிறுமிகளை போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள மடாதிபதி மீதான குற்றப்பத்திரிகையில் போலீசார் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டுள்ளனர்.

கர்நாடகாவின் சக்தி வாய்ந்த மடாதிபதி ஒருவர் மடத்தில் தங்கியிருந்த சிறுமிகளை போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

64 வயதான மடாதிபதியான அவர், மீது மடத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழும், பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மாணவிகள் இருவரும் மைசூரில் உள்ள அரசு சாரா நிறுவனத்தை அணுகியதை அடுத்து ஆகஸ்ட் 26ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக இரண்டு மாணவிகள் குற்றம் சாட்டினர்.

ஜூன்-ஜூலையில் புகார் அளிக்க மாணவிகள் மேற்கொண்ட முந்தைய முயற்சி தோல்வி அடைந்தது. மாணவிகள் புகார் அளிக்க வந்திருப்பது தொடர்பாக பெங்களூரு காவல்துறை, மடத்தின் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர். மடத்தின் அலுவலர்கள் வந்து மாணவிகளை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மடாதிபதி கைது செய்யப்பட்டார். கர்நாடகாவின் சித்ரதுர்கா மற்றும் மைசூர் மாவட்டங்களில் பொது மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டத்திற்குப் பிறகு  அவர் கைது செய்யப்பட்டார்.  கைது நடவடிக்கைக்கு முன்பாக, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மடத்தின் முன் கதவை அடைத்து பின் கதவு வழியாக அவரை வெளியே அழைத்துச் சென்றனர். அந்த அளவுக்கு அவருக்கு உள்ளூரில் மக்கள் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. 

குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு, மாநில அரசியல் தலைவர்கள், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகின்றனர்.  

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முன்னோடியும், முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ். எடியூரப்பா அவருக்குப் பகிரங்கமாகவே ஆதரவளித்தார். "தவறான வழக்கில் அவர் சிக்கியிருக்கிறார்" என அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்களை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடாதிபதி சிறுமிகளுக்கு போதை மருந்தை கொடுத்து அவர்களை பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். கடந்த மாதம் 27 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் குற்றப்பத்திரிகையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கில் ஹாஸ்டல் வார்டன் மற்றும் இன்னொரு நபரையும் போலீசார் சேர்த்துள்ளனர். இவர்களைத் தவிர ஒரு மைனர் உள்ளிட்ட இரண்டு பேர் மீதும் குற்றச்சாட்டுகள் ரீதியான ஆதாரங்களைத் தேடி வருவதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுளனர்.
 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget