மேலும் அறிய

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு. நண்பர்களுடன் குளித்த போது பரிதாபம்.

காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவர்

தென்காசி மாவட்டம், இடையகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் முகமது ஜமீன் கான் வயது 21. இவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் முகமது ஜமீன்கான் தனது நண்பர்களுடன் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றுக்கு குளிக்க வந்தார். இந்த நிலையில் காவிரி ஆற்றில் முகமது ஜமீன்கான் இறங்கி தனது சக நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால் தெரியும் இடத்தில் ஆழமான பகுதிக்கு சென்று முகமது ஜமீன்கான் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்....... காப்பாற்றுங்கள்........ என அபாய குரல் எழுப்பினர்.

 


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

சடலமாக மீட்பு

இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி முகமது ஜமீன்கானை தேடினர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கருர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சுமார் ஒரு மணி நேரம் ஆற்றில் இறங்கி மாணவரை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு கரூர் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் முகமது ஜமீன்கானை சடலமாக மீட்டனர். இதை அடுத்து முகமது ஜமீன்கான் உடலை மாயனூர் போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவேரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

க.பரமத்தி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார். 

லாரி டிரைவர் சாவு.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பள்ளமருதப்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் வயது 29 லாரி டிரைவர். இவர் கடந்த 24ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் பெரியதாதம்பாளையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி சத்யராஜ் நின்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 

கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை அருகே உள்ள திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் வயது 62 தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று திம்மாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், குளுமணியை சேர்ந்த வினோத் குமார் வயது 30 என்பவர் ஓட்டி வந்த வேன் செல்வராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் முசிறியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget