மேலும் அறிய

சொத்துத்தகராறில் சுகாதார ஆய்வாலரை கடத்திய வழக்கில் 2 பேர் கைது- 4 பேர் தலைமறைவு

சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வாளரை கடத்தி தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்து மேலும் 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன், சீர்காழி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை சீர்காழிக்கு செல்வதற்காக மன்னார்குடியில் பேருந்தில் புறப்பட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுகாதார ஆய்வாளரான ராஜேந்திரனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். காலை முதல் மாலை வரை காரிலேயே பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த நிலையில், கடத்தப்பட்ட ராஜேந்திரனின் சொந்த ஊரான மன்னார்குடி நோக்கி காரை ஓட்டி சென்றபோது தன்னை காப்பாற்றும்மாறு ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார்.



சொத்துத்தகராறில் சுகாதார ஆய்வாலரை கடத்திய வழக்கில் 2 பேர் கைது- 4 பேர் தலைமறைவு

இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் ராஜேந்திரனை கையில் வைத்திருந்த கத்தியால் வலது கால் தொடையில் குத்தி விட்டு மன்னார்குடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத சவளக்காரன் பகுதியில் ராஜேந்திரனை சாலையோரம் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த அப்பகுதியினர், பலத்த காயமடைந்து கதறிய சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து தகவலறிந்து மன்னார்குடி மருத்துவமனைக்கு விரைந்த மன்னார்குடி தாலுகா காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனிடம் தகவல்களை பெற்று விசாரணை மேற்கொண்டனர். 


சொத்துத்தகராறில் சுகாதார ஆய்வாலரை கடத்திய வழக்கில் 2 பேர் கைது- 4 பேர் தலைமறைவு

 

மேலும் சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரில் சொத்து பிரச்னை தொடர்பாக தனது உறவினர் இளங்கோவன் கூலிப்படை வைத்து தன்னை கடத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திரன் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம், சுகாதார ஆய்வாளரை கடத்தி சென்ற கார் ஓட்டுநர் கொரடாச்சேரியை சேர்ந்த 27 வயதான கார்த்திகேயன் மற்றும் கும்பகோணம் கீழகொட்டையூரை சேர்ந்த 22 வயதான ராகுல் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்னை சம்பந்தமாக இளங்கோவன் என்பவர் ராஜேந்திரனை கடத்த சொல்லியதாகவும் அதனையடுத்து விக்னேஷ்வரன், பரத், விஷ்ணுராம் ஆகியோருடன் சேர்ந்து ராஜேந்திரனை கடத்தியதும் தெரியவந்தது. அதனையடுத்து இளங்கோவன் உள்ளிட்ட 6 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராகுல் மீது கொலை வழக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget