மேலும் அறிய

சொத்துத்தகராறில் சுகாதார ஆய்வாலரை கடத்திய வழக்கில் 2 பேர் கைது- 4 பேர் தலைமறைவு

சீர்காழி நகராட்சி சுகாதார ஆய்வாளரை கடத்தி தாக்கிய வழக்கில் 2 பேரை கைது செய்து மேலும் 4 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன், சீர்காழி நகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை சீர்காழிக்கு செல்வதற்காக மன்னார்குடியில் பேருந்தில் புறப்பட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சுகாதார ஆய்வாளரான ராஜேந்திரனை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். காலை முதல் மாலை வரை காரிலேயே பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த நிலையில், கடத்தப்பட்ட ராஜேந்திரனின் சொந்த ஊரான மன்னார்குடி நோக்கி காரை ஓட்டி சென்றபோது தன்னை காப்பாற்றும்மாறு ராஜேந்திரன் சத்தம் போட்டுள்ளார்.



சொத்துத்தகராறில் சுகாதார ஆய்வாலரை கடத்திய வழக்கில் 2 பேர் கைது- 4 பேர் தலைமறைவு

இதனால் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் ராஜேந்திரனை கையில் வைத்திருந்த கத்தியால் வலது கால் தொடையில் குத்தி விட்டு மன்னார்குடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத சவளக்காரன் பகுதியில் ராஜேந்திரனை சாலையோரம் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அவ்வழியாக வந்த அப்பகுதியினர், பலத்த காயமடைந்து கதறிய சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து தகவலறிந்து மன்னார்குடி மருத்துவமனைக்கு விரைந்த மன்னார்குடி தாலுகா காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனிடம் தகவல்களை பெற்று விசாரணை மேற்கொண்டனர். 


சொத்துத்தகராறில் சுகாதார ஆய்வாலரை கடத்திய வழக்கில் 2 பேர் கைது- 4 பேர் தலைமறைவு

 

மேலும் சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் அளித்த புகாரில் சொத்து பிரச்னை தொடர்பாக தனது உறவினர் இளங்கோவன் கூலிப்படை வைத்து தன்னை கடத்தியதாக புகார் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ராஜேந்திரன் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை காவல் நிலைய ஆய்வாளர் செல்வம், சுகாதார ஆய்வாளரை கடத்தி சென்ற கார் ஓட்டுநர் கொரடாச்சேரியை சேர்ந்த 27 வயதான கார்த்திகேயன் மற்றும் கும்பகோணம் கீழகொட்டையூரை சேர்ந்த 22 வயதான ராகுல் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்னை சம்பந்தமாக இளங்கோவன் என்பவர் ராஜேந்திரனை கடத்த சொல்லியதாகவும் அதனையடுத்து விக்னேஷ்வரன், பரத், விஷ்ணுராம் ஆகியோருடன் சேர்ந்து ராஜேந்திரனை கடத்தியதும் தெரியவந்தது. அதனையடுத்து இளங்கோவன் உள்ளிட்ட 6 பேர் மீது மயிலாடுதுறை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் தலைமறைவாக இருக்கும் இளங்கோவன் உள்ளிட்ட 4 பேரை மயிலாடுதுறை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராகுல் மீது கொலை வழக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
Embed widget