மேலும் அறிய

Crime: இருவீடுகளில் கொள்ளை முயற்சி.... ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள்...!

மயிலாடுதுறை அருகே இருவேறு இடங்களில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாந்து சென்றுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் அருகே ஆழ்வார்குளம் மற்றும் மாப்படுகை பிரதான சாலை பகுதி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள 2 வீடுகளின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை ஆழ்வார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான சக்திவேல். இவர் தனது மனைவி அமலாவுடன்  கடந்த சனிக்கிழமை தஞ்சை மாவட்டம் அகரமாங்குடியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளனர். 


Crime: இருவீடுகளில் கொள்ளை முயற்சி.... ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள்...!

இந்நிலையில், இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், உள்ளே சென்று பார்த்த போது இரண்டு அறைகளில் பீரோக்கள் உடைக்கப்பட்டது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சக்திவேலின் தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ஏதும் இல்லாததால் எந்த பொருளும் திருட்டுப் போகவில்லை. 


Crime: இருவீடுகளில் கொள்ளை முயற்சி.... ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள்...!

மேலும் இதேபோன்று இந்த வீட்டின் அருகே உள்ள மாப்படுகை மெயின் ரோட்டில் வசிக்கும் 65 வயதான பழனிவேல் மற்றும் அவரது மனைவி செல்லமுத்து ஆகியோர் நேற்று தனது மகன் வீட்டுக்கு சென்னை சென்றுள்ளனர். அவரது வீட்டிலும் திருடர்கள் வீட்டின் முன்பக்க கதவு பீரோவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். அங்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பொருட்கள் ஏதும் திருடப்படவில்லை. ஒரே  சாலையில் இரண்டு வீடுகளில்  கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் திருட வந்த திருடர்கள் ஏமாந்து சென்றனர். இந்த இரண்டு சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்தி இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்திய கடற்படை துப்பாக்கி சூடு தாக்குதலில் காயம் அடைந்து மீனவரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், மீன்பிடிக்க கடலுக்கு சென்றபோது அவர்களை கடந்த 21ஆம் தேதி இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படகுகளில் இருந்தவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று சொந்த ஊரான வானகிரி திரும்பிய மீனவர்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். 


Crime: இருவீடுகளில் கொள்ளை முயற்சி.... ஏமாற்றத்துடன் திரும்பிய திருடர்கள்...!

அதனைத் தொடர்ந்து, கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வானகிரியில் நடைபெற்று வரும் மீன்பிடி இறங்குதளம் கட்டுமான பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியரிடம் பள்ளியை  தரம் உயர்த்தி கூடுதல் கட்டிடங்கள் ஏற்படுத்தி தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் சுனாமியின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட சுனாமி வீடுகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. அதனை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக சிதிலமடைந்த வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
"எல்லாம் காதலுக்காக.." எம்.எல்.ஏ-விடமே சினிமா பாணியில் கைவரிசை காட்டிய மேலாளர்: கிடுக்கிப்பிடி விசாரணையில் உடைந்த மயக்க நாடகம்!
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?
சாமியார்களுக்கே 'விபூதி' அடித்த போலீஸ் - திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருந்த கஞ்சா - சிக்கியது எப்படி?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
நகைப்பிரியர்களுக்கு குஷி.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
திமுக மீது CM விஜய் தாக்கு, கத்தாரில் தமிழர்கள் 3 பேர் பலி, குறைந்த தங்கம் - தமிழ்நாட்டில் இதுவரை
Consecutive holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
Tiruchendur: “நிம்மதியா சாமி கும்பிட விடுங்க” .. திருச்செந்தூர் கோயில் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த முடிவு!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
ஆசிரியர் இல்லாமல் பாழாகும் கல்வி.. மனசாட்சி இருக்கா முதலமைச்சரே? - விஜயை விளாசிய ஹெச்.ராஜா!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
CM Vijay: விஜயை வில்லங்கத்தில் மாட்டி விட்ட ரூட் ஜெகதீஷ்.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. குஷியில் எதிர்க்கட்சிகள்!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இத மட்டும் பண்ணா போதும்.. மொத்தமாக மாறப்போகும் காஞ்சிபுரம்! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
Embed widget