மேலும் அறிய

மயிலாடுதுறையில் பயங்கரம்: பள்ளி வாகனங்கள் மோதி விபத்து - 27 மாணவர்கள் படுகாயம்; மருத்துவமனையில் பெற்றோர் கதறல்!

மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்த 27 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனையை திரண்டதால் பெரும் பரபரப்ப சூழல் ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மற்றொரு தனியார் வாகன வேன் மோதிய கோர விபத்தில், 27 பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் பரவியதும், நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பதறியடித்தபடி அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவியது.

விபத்து நடந்தது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி கிராமத்தில் ஐடியல் சி.பி.எஸ்.இ (Ideal CBSE) பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நீடூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 33 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றுள்ளது. இந்த வேனை மஞ்சள் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வேனுக்குப் பின்னால் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மற்றொரு தனியார் வேன், எதிர்பாராதவிதமாக ஐடியல் பள்ளி வேனின் பின்புறம் பலமாக மோதியது.

குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் 

விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், பள்ளி வேனின் பின்புறம் அமர்ந்திருந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். பல மாணவர்கள் இருக்கைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்தவுடன் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சி.பி.எஸ்.இ பள்ளி வேனில் பயணம் செய்த 33 மாணவர்களில் 27 பேருக்கு உடல் மற்றும் தலைப் பகுதிகளில் பலத்த உள் காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக மற்றொரு வாகனத்தில் வந்த மாணவர்களுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் நிலவிய போர்க்களக் காட்சி

காயமடைந்த 27 மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த பெற்றோர்கள், தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். "என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று கதறியபடி அவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவை முற்றுகையிட்டதால் அங்கு போர்க்களம் போன்ற சூழல் நிலவியது. மருத்துவமனைத் தலைமை மருத்துவர் மருதவாணன் தலைமையில், ஒரு மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்குத் தீவிரச் சிகிச்சையளித்தனர். 

மருத்துவர்களின் அறிக்கை

"மாணவர்களுக்குப் புறக்காயங்கள் குறைவாகத் தெரிந்தாலும், வாகனத்தின் மோதலால் Internal Injuries எனப்படும் உள் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்களுக்கும் எக்ஸ்-ரே (X-Ray), ஸ்கேன் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை அனைவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர், இருப்பினும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்" என்று தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணை

ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணமா?

சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வேனை ஓட்டி வந்தவர் ஆனந்த தாண்டவபுரம் ஆர்க்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாகனம் அதிக வேகத்தில் வந்ததா? அல்லது பிரேக் செயலிழந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குமுறல்

இந்த விபத்து மயிலாடுதுறை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

* "பள்ளி வாகனங்கள் காலை நேரங்களில் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிவேகமாக இயக்கப்படுகின்றன."

 * "பல தனியார் வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் இன்றி மாணவர்களை ஏற்றிச் செல்கின்றன."

* "மாவட்ட நிர்வாகம் பள்ளி வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புச் சோதனைகளை நடத்த வேண்டும்." மேலும், இச்சம்பவம் குறித்துத் தனிப்படை அமைத்து விசாரிக்கவும், தவறிழைத்த ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
பிரச்சினைக்குத் தீர்வா? இல்லை குடிநீருக்கே வேட்டா? சீர்காழியில் நகராட்சி ஊழியர்களின் விசித்திர நடவடிக்கை!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
கொடைக்கானல் பங்களாவில் பயங்கரம்! நடிகை தந்தையின் கொடூர கொலை: அதிர்ச்சி திருப்பங்கள், 10 பேர் கைது!
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
பயணிகள் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்கள்: சீர்காழி அருகே நடந்த பயங்கர சம்பவம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Embed widget