மேலும் அறிய

மயிலாடுதுறையில் பயங்கரம்: பள்ளி வாகனங்கள் மோதி விபத்து - 27 மாணவர்கள் படுகாயம்; மருத்துவமனையில் பெற்றோர் கதறல்!

மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்த 27 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனையை திரண்டதால் பெரும் பரபரப்ப சூழல் ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மற்றொரு தனியார் வாகன வேன் மோதிய கோர விபத்தில், 27 பள்ளி மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் பரவியதும், நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பதறியடித்தபடி அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பும் சோகமும் நிலவியது.

விபத்து நடந்தது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி கிராமத்தில் ஐடியல் சி.பி.எஸ்.இ (Ideal CBSE) பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நீடூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் 33 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் சென்றுள்ளது. இந்த வேனை மஞ்சள் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வேனுக்குப் பின்னால் பல்வேறு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மற்றொரு தனியார் வேன், எதிர்பாராதவிதமாக ஐடியல் பள்ளி வேனின் பின்புறம் பலமாக மோதியது.

குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் 

விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், பள்ளி வேனின் பின்புறம் அமர்ந்திருந்த மாணவர்கள் தூக்கி வீசப்பட்டனர். பல மாணவர்கள் இருக்கைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்தவுடன் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் சி.பி.எஸ்.இ பள்ளி வேனில் பயணம் செய்த 33 மாணவர்களில் 27 பேருக்கு உடல் மற்றும் தலைப் பகுதிகளில் பலத்த உள் காயங்கள் ஏற்பட்டன. அதிர்ஷ்டவசமாக மற்றொரு வாகனத்தில் வந்த மாணவர்களுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.

மருத்துவமனையில் நிலவிய போர்க்களக் காட்சி

காயமடைந்த 27 மாணவர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்த பெற்றோர்கள், தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். "என் பிள்ளைக்கு என்னாச்சு?" என்று கதறியபடி அவர்கள் அவசரச் சிகிச்சைப் பிரிவை முற்றுகையிட்டதால் அங்கு போர்க்களம் போன்ற சூழல் நிலவியது. மருத்துவமனைத் தலைமை மருத்துவர் மருதவாணன் தலைமையில், ஒரு மருத்துவக் குழுவினர் மாணவர்களுக்குத் தீவிரச் சிகிச்சையளித்தனர். 

மருத்துவர்களின் அறிக்கை

"மாணவர்களுக்குப் புறக்காயங்கள் குறைவாகத் தெரிந்தாலும், வாகனத்தின் மோதலால் Internal Injuries எனப்படும் உள் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்களுக்கும் எக்ஸ்-ரே (X-Ray), ஸ்கேன் மற்றும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை அனைவரும் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டனர், இருப்பினும் தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர்" என்று தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

காவல்துறை விசாரணை

ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணமா?

சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.

விபத்தை ஏற்படுத்திய மற்றொரு வேனை ஓட்டி வந்தவர் ஆனந்த தாண்டவபுரம் ஆர்க்காடு பகுதியைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. அவரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாகனம் அதிக வேகத்தில் வந்ததா? அல்லது பிரேக் செயலிழந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குமுறல்

இந்த விபத்து மயிலாடுதுறை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:

* "பள்ளி வாகனங்கள் காலை நேரங்களில் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிவேகமாக இயக்கப்படுகின்றன."

 * "பல தனியார் வாகனங்கள் தகுதிச் சான்றிதழ் இன்றி மாணவர்களை ஏற்றிச் செல்கின்றன."

* "மாவட்ட நிர்வாகம் பள்ளி வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் சிறப்புச் சோதனைகளை நடத்த வேண்டும்." மேலும், இச்சம்பவம் குறித்துத் தனிப்படை அமைத்து விசாரிக்கவும், தவறிழைத்த ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாக்குச்சாவடியில் பயங்கரம்:கழுத்தில் கத்திக்குத்து.. தையல் போட்ட நிலையில் காவலர் தீவிர சிகிச்சை! வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
வாக்குச்சாவடியில் பயங்கரம்:கழுத்தில் கத்திக்குத்து.. தையல் போட்ட நிலையில் காவலர் தீவிர சிகிச்சை! வாக்குச்சாவடியில் நடந்தது என்ன?
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
Crime: வித்தியாசமாக காதலை சொல்வதாக கூறிய காதலி.. நம்பி சென்ற இளைஞர் எரித்துக் கொலை!
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
உடலுறவு வைத்து கொள்ள வற்புறுத்திய முன்னாள் காதலன் !! இறுதியில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்
TN Polling Percentage: தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு? அதிகபட்சம், குறைந்தபட்சம் எங்கே? இதுதான் விவரம்
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
TN Exit Polls 2026: தமிழ்நாட்டில் முடிந்த தேர்தல்... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு எப்போது? ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்
DMK vs TVK: சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் மல்லுகட்டு! துறைமுகத்தில் நடப்பது என்ன?
DMK vs TVK: சேகர்பாபு - தவெக வேட்பாளர் சினோரா அசோக் நேருக்கு நேர் மல்லுகட்டு! துறைமுகத்தில் நடப்பது என்ன?
Tamil Nadu Election 2026: முடிந்தது தேர்தல்! தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!
Tamil Nadu Election 2026: முடிந்தது தேர்தல்! தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!
Watch Video: பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்த ஆளுங்கட்சியினர்! நடந்தது என்ன?
Watch Video: பாஜக வேட்பாளரை ஓட ஓட விரட்டி அடித்த ஆளுங்கட்சியினர்! நடந்தது என்ன?
TN Election Voting Percentage: போட்டுத் தாக்கும் வாக்குப்பதிவு; முன்னெப்போதும் இல்லாத வகையில் சரமாரி அதிகரிப்பு- 3 மணி நிலவரம்- முழு லிஸ்ட்!
TN Election Voting Percentage: போட்டுத் தாக்கும் வாக்குப்பதிவு; முன்னெப்போதும் இல்லாத வகையில் சரமாரி அதிகரிப்பு- 3 மணி நிலவரம்- முழு லிஸ்ட்!
போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய ராணுவ வீரர்; புகாரளித்த திமுக- பெரம்பூரில் பரபர!
போக்குவரத்தை சீர் செய்ய விசில் ஊதிய ராணுவ வீரர்; புகாரளித்த திமுக- பெரம்பூரில் பரபர!
Chennai Vote Percentage:16 தொகுதிகள்! சென்னையில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம் ஓட்டுப்பதிவு?
Chennai Vote Percentage:16 தொகுதிகள்! சென்னையில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம் ஓட்டுப்பதிவு?
Embed widget