மேலும் அறிய

பூட்டிய வீட்டை நோட்டம் விட்டு 35 ஆண்டுகளாக கை வரிசை - திருடன் சிக்கியது எப்படி?

35 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் உள்ளிட்ட இருவரை மயிலாடுதுறை தனிப்படை காவலர்கள் கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆக்கூர் சிறுபுலி நாயனார் வீதியில் 7 நாட்களாக பூட்டி இருந்த சங்கர் என்பவர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 5.5 சவரன்  தங்கச் செயினை திருடிச் சென்றனர். இதேபோல் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டில் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.  இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.


பூட்டிய வீட்டை நோட்டம் விட்டு 35 ஆண்டுகளாக கை வரிசை - திருடன் சிக்கியது எப்படி?

அதனைத் தொடர்ந்து தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றச் சம்பவங்கள் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் அடையாளம்  கண்டனர். மேலும் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.  இந்நிலையில் செம்பனார்கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து காவல்துறையில் விசாரணை செய்த போது ஆக்கூரில் ஐந்தரை சவரன் நகையை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதான பாண்டியன் என்பவர் ஆக்கூரில் வாடகை வீட்டில் தங்கி,  பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு தனது உறவினரான நாகை மாவட்டம் கொத்தவாசல் பாடியைச் சேர்ந்த 57 வயதான குறசேகர் (எ) சேகர் என்பவருடன் இணைந்து தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. 

10th Public Exam Time Table: மார்ச் 26 - ஏப்.8: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?- தேதிவாரியாக முழு அட்டவணை!


பூட்டிய வீட்டை நோட்டம் விட்டு 35 ஆண்டுகளாக கை வரிசை - திருடன் சிக்கியது எப்படி?

இந்த குறசேகர் 35 ஆண்டுகளாக வீட்டின் கதவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக தனிப்படை காவலர்கள் இருவரையும் கைது செய்து  ஐந்தரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்து செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 35 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்காணிப்பு கேமரா உதவியால் அடையாளம் கண்டு கைது செய்த  தனிப்படை காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா மற்றும் செம்பனார்கோவில் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு!


பூட்டிய வீட்டை நோட்டம் விட்டு 35 ஆண்டுகளாக கை வரிசை - திருடன் சிக்கியது எப்படி?

மேலும் மயிலாடுதுறை தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான காவலர்கள் மயிலாடுதுறை பகுதிகளில் நடைபெற்ற ஏராளமான கொள்ளை சம்பவங்களில் விசாரணையில் ஈடுபட்டு குற்றவாளிகளை வெளிமாநில கூட சென்று விரைவாக  கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பகுதியில் அதிகளவு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு குற்றவாளிகளை பிடிப்பது மட்டும் இன்றி அடையாளம் காணுதல் கூட முடியாத காரியமாக இருந்தது வருகிறது.

10th 11th 12th Public Exam Result Date: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?- தேதிகள் அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
Lok Sabha Election 2024 LIVE: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 11 மணி நிலவரம்! 24.87 சதவீத வாக்குகள் பதிவு
Lok Sabha Election 2024 LIVE: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்; 11 மணி நிலவரம்! 24.87 சதவீத வாக்குகள் பதிவு
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
Embed widget