மேலும் அறிய

கதறிய சிறுமி... மிரட்டிய கொடூரன்: மயிலாடுதுறையில் கேஸ் ஸ்டவ் மெக்கானிக்கை தட்டி தூக்கிய மகளிர் போலீஸ்!

மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்த கேஸ் ஸ்டவ் பழுதுநீக்கும் தொழிலாளியை, அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அடுத்த அகரகீரங்குடி முட்டம், சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 42). இவர் அப்பகுதியில் கேஸ் ஸ்டவ் (எரிவாயு அடுப்பு) பழுது நீக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சிலம்பரசன் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் (Sexual Harassment) ஈடுபட்டுள்ளார். இதனால் நிலை குலைந்த அந்தச் சிறுமி, அதிர்ச்சியிலும் பயத்திலும் சத்தம்போட்டு கூச்சல் எழுப்பியுள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த கொடூரன்

சிறுமி கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயத்தில் சிறுமியை கடுமையாக மிரட்டியுள்ளார். "இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவேன்" என சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடமோ அல்லது வேறு யாருடமோ சொல்லக் கூடாது என பயமுறுத்தி அங்கிருந்து அனுப்பியுள்ளார்.

தாயிடம் கதறிய சிறுமி

சிலம்பரசனின் மிரட்டலால் மிரண்டுபோன அந்தச் சிறுமி, பயத்தில் அழுதுகொண்டே தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதையும், பதற்றமாக இருப்பதையும் கண்ட அவரது தாயார், அவரிடம் கனிவோடு விசாரித்துள்ளார். அப்போது, தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் தொல்லை குறித்தும், சிலம்பரசன் விடுத்த கொலை மிரட்டல் குறித்தும் அழுதுகொண்டே தாயாரிடம் சிறுமி விவரித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரியும், குற்றவாளிக்கு உரிய தண்டைனை பெற்றுத்தர வேண்டும் என்றும் முடிவு செய்தார். உடனடியாக அவர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

போலீசாரின் அதிரடி நடவடிக்கை மற்றும் கைது

சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் மகளிர் போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிலம்பரசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது முதற்கட்டமாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மீதான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences Act) உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, தலைமறைவாக முயன்ற சிலம்பரசனை மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றக் காவல் மற்றும் சிறைவாசம்

கைது செய்யப்பட்ட கேஸ் ஸ்டவ் தொழிலாளி சிலம்பரசனை, போலீசார் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் (Mayiladuthurai Court) ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட சிலம்பரசனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, போலீஸார் சிலம்பரசனை சிறையில் அடைத்தனர்.

பெற்றோர்களுக்குக் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

"குழந்தைகளிடம் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். யாராவது தவறான முறையில் தொட்டாலோ அல்லது மிரட்டினாலோ உடனடியாகப் பெற்றோரிடம் கூற வேண்டும் என்ற விழிப்புணர்வை குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்," என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி உடனடியாகப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் உள்ள பெண் குழந்தைகளின் பெற்றோர்களிடையே சற்றே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் தொடர்ந்து நிகழ்வது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
Tamil Nadu Budget 2026 LIVE: விஜய் ஆட்சியின் முதல் பட்ஜெட்.. இன்று சட்டசபையில் தாக்கல்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Aadhav Arjuna: டாய்லெட் புரட்சியாளர்.. தியாகியாக மாற்ற முயற்சி.. உதயநிதியை விளாசிய ஆதவ் அர்ஜூனா
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Divya Sathyaraj: முதலமைச்சரின் ஆணவம்.. உதயநிதி தப்பே செய்யல.. விஜயை விளாசிய திவ்யா சத்யராஜ்!
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Embed widget