மேலும் அறிய

ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!

புகாரை தொடர்ந்து அங்கு வந்த போலீசாரிம், ‛உங்களிடம் பேச முடியாது போய் SP யை வரச்சொல்...’ என்று அவர் கூறியதால், தனியாக வந்த காவலர் விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தங்க நகை செய்து வரும் தொழிலாளி கணேஷ். இவர் மயிலாடுதுறையில் உள்ள பிரபலமான ஒரு நகைக் கடையில் சென்று (GRT) மூக்குத்தி எடுத்துள்ளார். மூக்குத்திக்கு 450 ரூபாய் விலை உள்ள நிலையில், இதற்கான செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகியவை சேர்த்து 690 ரூபாய் வந்துள்ளது. வாங்கும் பொழுதே தான் ஒரு நகை தொழிலாளி என்பதால் செய்கூலி சேதாரம் போடக்கூடாது என தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனையடுத்து அவரை நகை கடை ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். 


ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்கு சென்று உற்சாக பானம் ஏற்றிக்கொண்டு மீண்டும் கடைக்கு வந்த கணேசன், சட்டையை கழற்றி விட்டு வெறும் வேட்டியுடன் நகை கடை அமைந்துள்ள முக்கிய கடைவீதியில் சாலையில் கடை வாசலில் நின்று கொண்டு அருவருப்பான வார்த்தைகளால் தாறுமாறாக பேசத் துவங்கினார். 450 ரூபாய் நகைக்கு 250 ரூபாய் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என தனது பணத்தை கொள்ளையடிப்பதாகவும், பணத்தை மீண்டும் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூறி அலப்பறையில் ஈடுபட்டார். 


ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

நகைக்கடை காவலாளிகள் அவரை சமாளிக்க முடியாமல் மயிலாடுதுறை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலையடுத்து அங்கு இரண்டு காவலர்கள் வந்தனர். உங்களிடம் பேச முடியாது போய் காவல்துறை கண்காணிப்பாளர் SP யை வரச்சொல் என்று காவலர்களிடம் வீராவேசம் பேசினார்.  இதனை அடுத்து தனியாக வந்த காவலர் விட்டால் போதும் என்று வண்டியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பிறகு  வந்த காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நகைக்கடை வாசலில் தங்கநகை செய்யும் தொழிலாளி ஒருவர் குடிபோதையில் மேற்கொண்ட அலப்பறை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


ரூ.450 நகைக்கு ரூ.250 வரியா... மது போதையில் கடை முன் அரை நிர்வாணத்துடன் ஆர்ப்பரித்த குடிமகன்!


ஜிஎஸ்டி வரி விதிப்பு சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், நடுத்தர ஏழை மக்களும் அவர்களின் சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள கடினப்பட்டு சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு பொருட்கள் வாங்க சென்றால் அதில் ஒரு பெரும் பகுதி ஜிஎஸ்டி க்கு செல்வதாகவும் வேதனை தெரிவித்து வருகின்ற நிலையில், ஒரு ஏழை தொழிலாளி 450 ரூபாய்க்கு 250 கூடுதலாக கட்ட வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான அந்த ஏழைத் தொழிலாளி ஆதங்கத்தில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என இச்சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நகைக்கடையில் உள்ளவர்களோ, பொதுமக்கள் யாரும் காவல்துறையிடம் புகார் மனு அளிக்கப்படவில்லை. இதனை அடுத்து அவரை முகவரியை பெற்றுக்கொண்டு அவரின் உறவினர்களை வரவழைத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.