மேலும் அறிய

"வெளியே சொன்னால் கொலை செய்திடுவேன்.." மயிலாடுதுறையில் 53 வயது பெண்ணை மிரட்டிய அரசியல் பிரமுகர் சிறையிலடைப்பு!

மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் நாற்காலி விற்கச் சென்ற பெண் வியாபாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்த தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் நாற்காலி விற்கச் சென்ற பெண் வியாபாரியை வீட்டிற்குள் வரவழைத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) மாநில பொதுக்குழு உறுப்பினரை மயிலாடுதுறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த 53 வயதான பெண்மணி ஒருவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக, தெருத் தெருவாகச் சென்று கோரைப்பாய்கள் மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை (சேர்) விற்பனை செய்து சுயதொழில் செய்து குடும்ப வாழ்வாதாரத்தை காத்து வருகிறார். இந்நிலையில், மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் 59 வயதான ஜான் ராஜ்குமார் என்பவரிடம் அந்த பெண் சேரை வியாபாரம் செய்துள்ளார். ஜான் ராஜ்குமார் தேமுதிக கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராகப் பொறுப்பில் உள்ளார்.

வீட்டிற்கு வரவழைத்து அத்துமீறல்

சம்பவத்தன்று, அந்த பெண்மணியிடம் இருந்து ஜான் ராஜ்குமார் 10 பிளாஸ்டிக் நாற்காலிகளை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கிய நாற்காலிகளில் 2 நாற்காலிகள் உடைந்திருப்பதாகக் கூறிய ஜான் ராஜ்குமார், அதற்குப் பதிலாக வேறு நல்ல நாற்காலிகளை எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், அவர் புதியதாக 2 பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்துக்கொண்டு ஜான் ராஜ்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த ஜான் ராஜ்குமார், வெளியில் நின்ற பெண்மணியிடம், அந்த நாற்காலிகளை வீட்டிற்குள்ளே கொண்டு வந்து வைத்துவிட்டுச் செல்லுமாறு கூறியுள்ளார்.

வாடிக்கையாளர் கூறுகிறாரே என்ற நம்பிக்கையில், அவர் அந்த 2 நாற்காலிகளையும் தூக்கிக்கொண்டு வீட்டின் ஹாலுக்குள் (வரவேற்பு அறை) சென்று வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஜான் ராஜ்குமார் திடீரென அந்த பெண்மணியை பலவந்தமாக அரவணைத்து, அவருக்கு முத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த திடீர்ச் செயலால் நிலை குலைந்த அவர், அதிர்ச்சியிலும் பயத்திலும் கூச்சலிட்டவாறே அவரை பலமாகத் தள்ளிவிட்டு, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார்.

கொலை மிரட்டல் விடுத்த அரசியல் பிரமுகர்

வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததைக் கண்டு பதற்றமடைந்த ஜான் ராஜ்குமாரும் பின்னாடியே வெளியே வந்துள்ளார். தனது அரசியல் செல்வாக்கை நம்பி, அந்த பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி, "இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன், கொலை செய்துவிடுவேன்" என்று கொடூரமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் வியாபாரி, ஜான் ராஜ்குமாரின் மிரட்டலுக்குப் பயந்துவிடாமல், தனக்கு நேர்ந்த அநீதிக்குச் சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற துணிச்சலுடன் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

போலீசாரின் அதிரடி விசாரணை மற்றும் கைது

அரசியல் கட்சிப் பிரமுகர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், புகார் பெறப்பட்டவுடன் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பெண் வியாபாரியிடம் ஜான் ராஜ்குமார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதும், கொலை மிரட்டல் விடுத்ததும் உண்மை எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல், பாலியல் வன்கொடுமை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான் ராஜ்குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் - சிறையிலடைப்பு

கைது செய்யப்பட்ட ஜான் ராஜ்குமாரை, மயிலாடுதுறை போலீசார் பலத்த பாதுகாப்புடன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட ஜான் ராஜ்குமாரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சுயதொழில் செய்து பிழைப்பு நடத்தும் 53 வயது பெண் வியாபாரியிடம், அரசியல் பொறுப்பில் இருக்கும் நபர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், அதற்கு போலீசார் காட்டிய அதிரடி நடவடிக்கையும் மயிலாடுதுறையில் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" நிர்வாண வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் " இளம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
நொறுங்கிய அரசு பேருந்துகள்! கதறிய பயணிகள்! மயிலாடுதுறையில் அதிகாலை நேர்ந்த கொடூர விபத்து!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்: செஞ்சியில் காலாவதி சாக்லேட் சாப்பிட்டு 18 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
LPG Tanker Accident: கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
கன்ட்ரோலை இழந்த எல்பிஜி டேங்கர்..! டோல்கேட்டில் மோதி, வானுயர பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
DMK ELECTION PLAN : 7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
7 தொகுதியும் திமுகவிற்கு தான்.! அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்- அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
Embed widget