மேலும் அறிய

சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

’’ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்’’

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஈசானிய தெரு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான தனசேகரன். இவர் வைதீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த தனசேகரன் உறவினர்களுக்கும், அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் மகன் 20 வயதான பிரதீப் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 35 வயதான அமிர்தராஜ் என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து அமிர்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார்,  சீர்காழி ஈசானித் தெருவை சேர்ந்த 47 வயதான பாபு மற்றும் காவலர் தனசேகரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், அமிர்தராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சட்டத்தை மதித்து குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காவலர் சட்டத்திற்கு புறம்பாக எதிர் தரப்பினரை கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய சட்டத்தை மீறியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும், மற்ற காவலர்களும் இதனை பின்பற்றாமல் இருக்க காவலர் தனசேகருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையை சேர்ந்த காவலர் சட்டத்தை மதிக்காமல் ரவுடி போல் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget