மேலும் அறிய

சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்..!இறந்தவர்களின் பெயரில் போலி ஆதார் தயார் செய்து மோசடி..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இறந்தவர்களின் பெயரில் போலி ஆதார் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறந்தவர்களின் பெயரில் போலியாக ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்ததாகவும், இதில் ஈடுபட்ட சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்ன நடந்தது?

சீர்காழி அருகே உள்ள பெருந்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சண்முகம், நடராஜன், மற்றும் கண்ணன் ஆகியோர் சகோதரர்கள். இவர்களுக்குச் சொந்தமாக நத்தம் வகை வீட்டு மனை இருந்துள்ளது. இவர்களில் சண்முகம், நடராஜன், கண்ணன் ஆகியோர் ஏற்கனவே காலமான நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் இந்தச் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்துள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி, காலமான மூன்று சகோதரர்களின் பெயரிலும் போலியாக ஆதார் அட்டைகளைத் தயார் செய்து, சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் இந்த வீட்டு மனைக்கான கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வெளிச்சத்துக்கு வந்த மோசடி 

இந்த மோசடிப் பத்திரப்பதிவு குறித்து பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிலருக்குத் தெரியவரவே, அவர்கள் உடனடியாக இந்த முறைகேடு குறித்து விசாரிக்கத் தொடங்கினர். போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர்களின் சொத்தை கிரயப் பத்திரம் செய்ததைக் கண்டித்து, மாவட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி புகார் மனு ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, மாவட்ட சார் பதிவாளர் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். விசாரணையின் அழுத்தம் காரணமாகவோ என்னவோ, அடுத்த நாளே (மே 21), சர்ச்சைக்குரிய கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்த நபர்கள் தாங்களாகவே ரத்து செய்துவிட்டதாகத் தெரிகிறது.

நடவடிக்கை இல்லை

பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களின் சொத்தை அபகரிக்க முயற்சி செய்ததோடு, அதற்காகப் போலியான அரசு ஆவணங்களான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்திய நபர்கள் மீதும், இந்தப் போலி ஆவணங்களைப் பெற்றுப் பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த புகார்தாரர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட பதிவாளர், சீர்காழி சார் பதிவாளர் உட்படப் பல்வேறு தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனுக்களை அனுப்பி வந்தனர். ஆனால், புகார் அளித்து மாதங்கள் கடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது அதிகாரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் துணை போகிறார்களோ என்ற ஐயத்தையும், பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும் இது ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தை

தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், பொறுமையிழந்த பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கடமையைச் சரிவரச் செய்யாமல் போலி ஆவணங்களை ஏற்றுப் பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் உருவானதுடன், சில மணி நேரங்களுக்குப் பத்திரப்பதிவுப் பணிகளும் பாதிக்கப்பட்டன.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சீர்காழி காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சார் பதிவாளர் மூலம், போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போலியாக ஆதார் அட்டைகள் தயாரித்து, இறந்தவர்களின் சொத்துக்களைப் பதிவு செய்ய முயன்ற இந்தச் செயல், பத்திரப்பதிவுத் துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget