மேலும் அறிய

"ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன்" - ஜாமீனில் வெளிவந்த பாஜக மாவட்ட தலைவருக்கு உற்சாக வரவேற்பு

மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடக் கூடாது என்பதற்காக என் மீது ஆதாரமில்லாமல் வழக்குப்பதிவு செய்து வீண்பழி சுமத்தப்பட்டுள்ளது என பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கும், ஆன்மீகத்திற்கு எதிராக ஒருபோதும் இருக்க மாட்டேன் என தருமபுரம் ஆதீனம் குறித்த போலி ஆபாச வீடியோ தொடர்பான வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த மயிலாடுதுறையை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தெரிவித்துள்ளார்.

காவல்நிலையத்தில் புகார் அளித்த தருமபுரம் ஆதீன கர்த்தரின் சகோதரர் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்து அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமையான தருமபுரம் ஆதீனம் திருமடம். இந்த ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆதீன கர்த்தரின் ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாக கூறி பணம்கேட்டு மிரட்டியதாக ஆதீன கர்த்தரின் சகோதரர் விருத்தகிரி என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 -ம் தேதி மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். 

பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு

புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் வினோத், விக்னேஷ், குடியரசு, ஸ்ரீநிவாஸ் ஆகிய நான்கு பேர் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 16 -ம் தேதி கைது செய்யப்பட்ட பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பலமுறை ஜாமீன் கேட்டு மயிலாடுதுறை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தும் ஜாமீன் வழங்கப்படாத நிலையில் நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. 


ஜாமீனில் வெளிவந்த பாஜக  மாவட்ட தலைவர்

அதனைத் அடுத்து இன்று திருச்சி மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மயிலாடுதுறைக்கு வந்த பாஜக மாவட்ட தலைவர் அகோரத்திற்கு  கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சித்தர்க்காடு பகுதியில் பட்டாசு வெடித்து ஆள் உயர மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாவட்ட தலைவர் அகோரம் கூறுகையில், தருமபுரம் ஆதீனத்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நான் மிரட்டியதாக பொய்வழக்கு பதிவு செய்தனர். தருமபுரம் ஆதீனத்தின் மீது மிகப்பெரிய பற்றுவைத்துள்ளேன். பட்டினப்பிரவேசம் நடத்தக்கூடாது என்று திமுக அரசு தடைவிதித்தபோது, 24 மணிநேரம் இரவு பகல் பாராமல் உழைத்து பட்டினப்பிரவேசத்தை நடத்திகாட்டினேன். சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செப்பேடுகள், உலோக சிலைகள் கண்டெடுத்தபோது நிர்வாகத்திற்கும், தருமை ஆதீனத்திற்கு ஒத்துழைப்பாக இருந்தேன்.


பாஜகவிற்கும், ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டேன்

பாஜகவிற்கும், ஆன்மீகத்திற்கு எதிராக இருக்கமாட்டேன். நான் தேர்தலில் நிற்ககூடாது என்று என்மீது வீன்பழி சுமத்தப்பட்டது. நான் தவறு செய்திருந்தால் அதற்கான ஆவனங்களை வெளியிட வேண்டும். பாஜகவிற்கும், ஆதீனத்திற்கும் துரோகம் செய்யவில்லை. சில துரோகிகள் திட்டமிட்டு அவதூராக பழிசுமத்தியிருக்கிறார்கள். என்மீது போடப்பட்ட பொய்வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி, தமிழக கவர்னரை சந்திக்க உள்ளேன். என்மீது தவறான குற்றம் சுமத்தியவர்களை சட்டரீதியாக தண்டிப்பதற்கான நடவடிக்கை எடுப்பேன். இந்த வழக்கில் திமுகவை சேர்ந்தவர், அதிமுகவை சேர்ந்தவர், ஆதீன நேர்முக உதவியாளர் என்று 4 பேர் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ளேன்

இந்த சமுதாயத்திற்கும், தருமபுர ஆதீனத்திற்கு துரோகம் செய்யாமல், ஒரு தவறும் செய்யாமல் 90 நாட்கள் நான் சிறையில் இருந்துள்ளேன். எஞ்சிய 4 பேரை கைது செய்ய வேண்டும். தருமபுர ஆதீனத்தின் நேர்முக உதவியாளரை காவல்துறை பிடிக்கவில்லை. அவரைப் பிடித்தால் உலகமே சிரிப்பாய் சிரிக்கும் நீங்கள் பிடிக்க மாட்டீர்கள் நான் பிடிப்பேன். என்னிடம் இருந்து கைப்பற்றியதாக கூறப்படும் வீடியோ, ஆடியோ இருந்திருந்தால் ஏன் இதுவரை காவல்துறை அதனை இன்னும் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.