மேலும் அறிய

காரைக்காலுக்கு படையெடுக்கும் மயிலாடுதுறை குடிமகன்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியாக காரைக்காலுக்கு படையெடுக்கும் குடிமகன்களால் மாவட்டத்தில் மேலும் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது சில நாட்களாக மெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பொதுமுடக்கத்தில் தமிழ்நாடு அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று குறையாத காரணத்தால் ஒருசில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


காரைக்காலுக்கு படையெடுக்கும் மயிலாடுதுறை குடிமகன்கள்!

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அண்மையில் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அண்டை மாவட்டங்களில் இருந்து புதுச்சேரி மாவட்டத்திற்கு மது வாங்க குடிமகன்கள் குவிந்து வருகின்றனர். அவ்வகையில், புதுச்சேரி மாநிலத்துக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்துக்கு தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் வழியாக குடிமகன்கள் சாரை சாரையாக இருசக்கர வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர். 


காரைக்காலுக்கு படையெடுக்கும் மயிலாடுதுறை குடிமகன்கள்!

மயிலாடுதுறை - காரைக்கால் எல்லையான நல்லாத்தூரில் மதுவாங்க மாவட்ட எல்லைக்கு 2 கிலோமீட்டர் முன்பாகவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, ஆற்றின் வழியாக நடந்து சென்று மதுவாங்கிச் செல்கின்றனர். சோதனைச்சாவடியில் காவல்துறையினர் கெடுபிடி காட்டி, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாலும், குடிமகன்களில் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலையே நிலவி வருகிறது. இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படாததால் இந்த மாவட்டத்திலிருந்து மதுப்பிரியர்கள் மதுவாங்க காரைக்காலுக்கு படையெடுப்பது தொடரும் என்பதால், சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்தி, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


காரைக்காலுக்கு படையெடுக்கும் மயிலாடுதுறை குடிமகன்கள்!

மேலும் தொற்று அதிகமாக உள்ள மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும், இதனால் தொற்று குறைய சிறிதளவும் வாய்பில்லை என்பதால் புதுச்சேரி மாநில அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திற்குள் நுழையும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அத்தியாவசிய தேவை இன்றி மது வாங்கும் நோக்கில் வருபவர்களை அனுமதிக்க கூடாது என்றும், மதுக்கடைகளுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மது வழங்க கூடாது என உத்தரவை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏராளமான மதுபாட்டில்கள் கடத்தி வந்து விற்பனை நடைபெற்று வரும் இந்த சூழலில் மதுவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றின் அச்சம் இன்றி வரும் மது பிரியர்கள் போன்றவர்களால் தான் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கிறது என்ற பேச்சுக்கு இதன்போன்ற சம்பவங்களை சாட்சியாக அமைகிறது.

தலைப்பு செய்திகள்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
IND vs AFG: சுபமாக முடித்து வைத்த ரோகித் - ஜெய்ஸ்வால்! ஆப்கானிஸ்தானை வெறுங்கையுடன் அனுப்பி வைத்த இந்தியா
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு & PNR ஸ்டேட்டஸ் செக் கையேடு 2026
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
மேகதாட்டு விவகாரம்: ‘புதிய நடுவர் மன்றக் கோரிக்கை’ எனும் பிழையைத் திரும்பப் பெறுக: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நெத்தியடி முழக்கம்
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
கருணாநிதி பேனாவுக்கு கல்தா கொடுப்பாரா முதலமைச்சர் விஜய்? தீர்ப்பாயம் கேள்வி
TN RAIN ALERT: அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் காற்றோடு புரட்டி எடுக்கப்போகுது கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு டேஞ்சர்- லிஸ்ட் இதோ
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை நோக்கி கிராமங்களுக்கு வந்துள்ளேன்! – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
NEET Re-Exam Issue: நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
நாக்பூர் மாணவருக்கு ‘NEET‘ கொடுத்த ஷாக்.! அபுதாபியில் தேர்வு மையம்; நடந்தது என்ன.?
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Samantha: அம்மாவாகிய சமந்தா? கேக் வெட்டி கொண்டாட்டம் - திரும்பும் திசையெல்லாம் வாழ்த்து
Embed widget