மேலும் அறிய

சினிமா பாணியில் கொள்ளை! குடும்பத்திற்காக முன்னாள் முதலாளியிடம் ரூ.14 லட்சத்தை திருடிய வாலிபர்!

உத்தரபிரதேசத்தில் தங்கை திருமணம் மற்றும் அப்பாவின் கடனுக்காக முன்னாள் முதலாளியிடம் இளைஞர் ரூபாய் 14 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் வசித்து வருபவர் நமன். இவரது ஓட்டுனர் கவுதம். இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள ஹைதர்பூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். நமன் தொழிலதிபராக உள்ளார். அவர் தனது பையில் ரூபாய் 14.5 லட்சம் வைத்திருந்தார். ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியது.

ரூ.14.5 லட்சம் கொள்ளை:

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர் நமன் மற்றும் கவுதமுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென வந்த இரண்டு பேர் நமனின் பையைத் திருடிச் சென்றனர். இதனால், நமன் மற்றும் அவரது ஓட்டுனர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையடுத்து, நமன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சியை வைத்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது நமனிடம் பணியாற்றிய முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்தது.

முன்னாள் ஊழியர் அரங்கேற்றியது அம்பலம்:

நமனிடம் பணியாற்றியவர் கௌதம். அவருக்கு வயது 20. அவரது அண்ணன் குட்டு ( வயது 23). அவரது நண்பர்கள் குணால் அவருக்கு வயது 23. அவரது நண்பர் சுமித். அவருக்கு வயது 19. கௌதம் நமனிடம் ஓராண்டுக்கு முன்பு பணியாற்றி வந்துள்ளார். பின்னர், அவர் வேலையில் இருந்து விலகிவிட்டார்.

இந்த சூழலில், கௌதமின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. கௌதமின் சகோதரிக்கு திருமண செலவு, மற்று்ம அவரது தந்தை வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க வேண்டிய சூழல் என கடும் பொருளாதார நெருக்கடியில் கௌதம் சிக்கிக் கொண்டார். இதையடுத்து, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற கௌதம் முடிவு செய்துள்ளார்.

பின்னர், தனது நண்பர்கள் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். போலீசார் தற்போது குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 11.56 லட்சம் பணத்தையும், இரண்டு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முன்னாள் முதலாளியிடம் தங்கை திருமணம் மற்றும் அப்பாவின் கடனுக்காக இளைஞர் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் இருந்து குற்றவாளிகள் ரூபாய் 3 லட்சம் வரை செலவு செய்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai School Students : அரசு நிகழ்ச்சில் சாமி பாடல்! சாமி ஆடிய மாணவிகள்!Vineeth Srinivasan on Nivin Pauly : சிக்கலில் நிவின் பாலி?ஆதாரத்தை வெளியிட்ட DIRECTOR! புது TWISTJammu Kashmir Cong.Manifesto : தள்ளி போய் விளையாடுங்க!காலரை தூக்கும் ராகுல்! காங்.வசமாகும் காஷ்மீர்!MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Maha Vishnu: அரசு பள்ளிகளில் மூட நம்பிக்கை பேச்சு: மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.! முழு விவரம்.!
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Mahavishnu Arrest: சென்னை வந்த மகாவிஷ்ணு கைது! விமான நிலையத்திலே மடக்கிய போலீசார் - விசாரணை தீவிரம்
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
Breaking News LIVE: கழிவறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்: தலைமை ஆசிரியர் பாப்பா இடமாற்றம்!
TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
"உங்களுக்கு கடவுள் தந்த தண்டனை" வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் தோல்வி குறித்து பிரிஜ் பூஷன் பரபர!
Sunita Williams: சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பிய விண்கலம்: பாதுகாப்பாக தரையிறங்கியதா?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? -  கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறதா..? - கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?
Vinayagar Chaturthi: பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? -  முழு வரலாறு இதோ
பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? - முழு வரலாறு இதோ
Embed widget