மேலும் அறிய

“எத்தனை முறைதான் சாமிகிட்ட கேக்குறது?” - மனைவி, குழந்தைக்காக ஆத்திரத்தில் கோயில் சிலையை உடைத்த நபர் கைது

தன் மனைவிக்கும் தன் ஐந்து வயது குழந்தைக்கும் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், கோபத்தில் கடவுள் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

தன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த காரணத்தால், கோபத்தில் கடவுள் சிலைகளை சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், நொய்டாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உளி சுத்தியல் கொண்டு சேதம்...

முன்னதாக திங்கள்கிழமை (மே.23)  அக்கோயிலில் இருந்த மூன்று சிலைகள் சேதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வழக்கு பதியப்பட்டு சிலையை சேதப்படுத்தியவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சட்டர்பூரைச் சேர்ந்த வினோத் குமார் எனும் நபர் தற்போது கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: Domestic Violence Rajasthan: தினமும் அடிக்கும் மனைவி.. வைரலான வீடியோ.. மனமுடைந்து நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்!

அக்கோயிலுக்கென்று தனியாக பூசாரிகள் எவரும் இல்லாத நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலைகளை சேதப்படுத்த வினோத் குமார் பயன்படுத்திய ஆயுதங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

காரணம் என்ன?

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன் மனைவியும், தன் ஐந்து வயது குழந்தையும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தன் அன்புக்குரிய அத்தை உயிரிழந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தான் இதுகுறித்து தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டும் தன் குடும்பத்தாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

இந்நிலையில், வினோத் குமார் தான் சிலைகளை உடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சுத்தியல், உளி போன்ற ஆயுதங்கள் அவரிமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வழிபாட்டுத் தலங்களில் சேதம் விளைவிப்பது தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295இன் கீழ் வினோத் குமார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இதேபோல் டெல்லியில் மழை பெய்யாத காரணத்தாலும், தாங்க முடியாத வெப்பநிலை காரணமாகவும் கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget