மேலும் அறிய

நெல்லை: பள்ளிவாசலில் குழந்தையை கடத்தியவர் கேரளாவில் கைது - குழந்தையை எதற்காக கடத்தினார்..?

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா பகுதியை சேர்ந்த உமர் பாரூக் (37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது ஆற்றங்கரை பள்ளிவாசல். மிகவும் புகழ்பெற்ற இந்த ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து தங்கியிருந்து வழிபாடு நடத்தி செல்வர். இந்த சூழலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, தனது மனைவி நாகூர் மீரா, குழந்தைகள் முகமது சபிக் (7),  நஜிலா பாத்திமா (2 1/2) ஆகியோருடன்  கடந்த 11 ஆம் தேதி ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று உள்ளனர்.


நெல்லை: பள்ளிவாசலில் குழந்தையை கடத்தியவர் கேரளாவில் கைது - குழந்தையை எதற்காக கடத்தினார்..?

 

தனது இரு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்த வந்த  நிலையில் இரவு நேரமாகியதால் தனது குழந்தைகளுடன் தர்காவில் உள்ள திண்ணையில் தூங்கி உள்ளனர். பின்னர்  12.07.22 அன்று அதிகாலை தூங்கி எழுந்து பார்த்த போது தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை நஜிலா பாத்திமா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் தூக்கி கொண்டு நடந்து சென்று அருகே நிறுத்தி இருந்த காரில் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. இந்த  சூழலில் இது தொடர்பாக கூடங்குளம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 13.07.22 அன்று  குழந்தை திருச்செந்தூரில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தியவரை தேடி வந்த நிலையில் அந்த  நபர் கேரளாவில் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.


நெல்லை: பள்ளிவாசலில் குழந்தையை கடத்தியவர் கேரளாவில் கைது - குழந்தையை எதற்காக கடத்தினார்..?

அதன் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு அத்தனிப்படை கேரளா சென்று இரண்டு வாரமாக தங்கியிருந்து தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தகவல்களை சேகரித்து தேடி வந்த நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா பகுதியை சேர்ந்த உமர் பாரூக் (37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்ததுள்ளது.  இந்த நிலையில் தனிப்படையினர் உமர் பாரூக்யை  கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்று வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் இவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget