Crime News: பிளாக் செய்த காதலி! கோவத்தில் கோடாரியை தூக்கிய காதலன்.. நடந்தது என்ன?
காயத்ரியின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் அசோக் கச்ரா மீது ஜாம்கேத் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

தன்னுடன் பேச மறுத்ததற்காகவும், தனது எண்ணை பிளாக் செய்ததற்காகவும் காதலியை வாலிபர் கோடரியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
26 வயதான நடனக் கலைஞர் காயத்ரி துஷார் சாவந்த் மகாராஷ்டிர மாநிலம் அஹில்யாநகர் மாவட்டம், ஜாம்கேத், தப்னேஷ்வர் காலியில் தனது தோழியுடன் வசித்து வருகிறார். காயத்ரி நடன்மாடி தனது வருமானத்தை ஈட்டிக்கொண்டு வருகிறார், இவருக்கும் ராகுல் அசோக் என்கிற நபருக்கும் 5 ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்த நிலையில் ராகுல் அசோக் மீது ஏற்கெனவே தொந்தரவு செய்ததாக புகாரளித்துள்ளார்.
கோடாரியால் தாக்குதல்:
இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் காயத்ரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் “என்னுடன் பேசு, என்னை காதலித்து விடு, இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார், இதனால் அவரது இணைப்பு காயத்ரி உடனடியாக துண்டித்துள்ளார், இதன் பிறகு மீண்டும் 6 ஆம் தேதி இரவு 2 மணி அளவில்காயத்ரி சாவந்த் தனது தோழி மனிஷா ஜவாலேவுடன் தனது அறையில் இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட ராகுல், குப்பைக் கட்டிடத்தின் அருகே மறைந்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர், கோடரியுடன் ஆயுதம் ஏந்தி, காயத்ரியின் அறைக்குள் நுழைந்து, "நீ ஏன் என்னிடம் பேசக்கூடாது? ஏன் என் எண்ணைத் தடுத்தாய்?" என்று கத்திக் கொண்டே, கோடரியால் காயத்ரி சாவந்தின் விரல்கள், கைகள் மற்றும் தலையில் தாக்கினார். தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார்.
தலைமறைவாகி விட்ட அசோக்:
இதற்கிடையில், தோழி மனிஷா ஜவாலே, அசோக்கை தடுக்க முயன்றார், தனது தோழியை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அசோக் காயத்ரியிடம் "நான் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயத்ரியின் புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் அசோக் கச்ரா மீது ஜாம்கேத் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாக உள்ளார், போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
























