மேலும் அறிய

‛மாணவர்களை கவர ஆடை அணியும் மாணவிகள்’ ஆபாசம் பேசிய பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது!

மத்தியப் பிரதேச மாநில அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் மீது மாணவிகளை சீருடை அணியாத காரணத்திற்காக,  ஆபாசமாகத் திட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநில அரசுப் பள்ளி முதல்வர் ஒருவர் மீது மாணவிகளை சீருடை அணியாத காரணத்திற்காக,  ஆபாசமாகத் திட்டியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின் முதல்வராகப் பணியாற்றி வரும் ராதேஷ்யாம் மாளவியா தன் மாணவிகளின் உடை குறித்து ஆபாச கருத்துகளைக் கூறியதாகவும், அவர்களை அவமானப்படுத்தியதாகவும் புகார் எழுந்த நிலையில் அவர் மீது ராஜ்கர் மாவட்ட மாசல்பூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்று, பன்னிரண்டு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று, சீருடை அணிந்து வராததற்காகப் பள்ளி முதல்வர் ஆபாசமாகத் திட்டியதாக கூறியுள்ளனர். “நாங்கள் அவரிடம் எங்கள் சீருடை இன்னும் தைத்து முடிக்கப்படாததால் தயாராகவில்லை என்று கூறினோம். எனினும் அவர் எங்களைப் பொருட்படுத்தாமல் திட்டிக் கொண்டே இருந்தார். அதனைத் தொடர்ந்து எங்களை அவர் ஆபாசமான சொற்களால் அவமானப்படுத்த தொடங்கினார். அவர் எங்களை நோக்கி, மாணவிகள் பேஷனாக உடை அணிந்து ஆண் மாணவர்களைக் கவர்வதாகவும், ஆண் மாணவர்கள் கெடுவதற்கு நாங்கள் தான் பொறுப்பு என்றும் கூறினார். மேலும் அவர் சீருடை இல்லாவிட்டால் பள்ளிக்கு நிர்வாணமாக வாருங்கள்” என்று தங்களுக்கு நேர்ந்தவற்றைப் பகிர்கின்றனர் அப்பள்ளியின் மாணவிகள்.  

‛மாணவர்களை கவர ஆடை அணியும் மாணவிகள்’ ஆபாசம் பேசிய பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது!
மாதிரி படம்

 

இதனையடுத்து பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர் பாதிக்கப்பட்ட மாணவிகள். மாணவிகளின் பெற்றோர் பள்ளி முதல்வரைக் கேள்வி எழுப்பிய போது மழுப்பிய அவர், மாணவிகளிடம் சீருடை அணிவது பள்ளியின் விதி என்றும், அதனைப் பின்பற்றுமாறு மட்டுமே சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பள்ளி முதல்வரின் ஆபாசப் பேச்சைக் கண்டித்து, அப்பள்ளியின் மாணவ்ர்கள் பள்ளி வளாகத்திற்குள் போராட்டம் நடத்தியுள்ளனர். பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதன் தொடர்ச்சியாக, பள்ளி முதல்வர் ராதேஷ்யாம் மாளவியா மீது 509ஆம் சட்டப்பிரிவு (ஒரு பெண்ணின் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு வார்த்தையால், ஒலி எழுப்புதல், சைகையின் மூலம் அல்லது ஏதேனும் பொருளை வெளிப்படுத்தல் அல்லது அப்பெண்ணின் தனிமையில் குறுக்கிடுதல்), 355ஆம் சட்டப்பிரிவு (அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாசல்பூர் காவல் நிலைய அதிகாரி பிரதீக் ஷர்மா கூறியுள்ளார். மாளவியா தலைமறைவாக இருப்பதாகவும், காவல்துறையினர் அவரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‛மாணவர்களை கவர ஆடை அணியும் மாணவிகள்’ ஆபாசம் பேசிய பள்ளி முதல்வர் மீது போக்சோ பாய்ந்தது!
மாசல்பூர்

 

இந்த விவகாரம் குறித்து ராஜ்கர் மாவட்ட கல்வி அதிகாரி பி.எஸ்.பிசோரியா, “பள்ளி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து அறிந்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget