மேலும் அறிய

அதிரடி மது வேட்டை: காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 சாராய பாட்டில்கள் பறிமுதல்! ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்..!

காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு கடத்தி வரப்பட்ட 500 பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்து, ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு பாண்டிச்சேரி மதுபானம் கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை முழுவதும் தடுக்க முடியவில்லை என்றாலும், கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.

அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவது மற்றும் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் விதமாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர மது வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று (14.11.2025) நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையின்போது, காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட சுமார் 500 எண்ணிக்கையிலான பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாப்படுகை ரயில்வே கேட் அருகே சிக்கிய கடத்தல் கும்பல்

நேற்று, மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில், மயிலாடுதுறை மதுவிலக்கு காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, PY02 S 7225 JUPITOR மற்றும் PY02 W 9803 BURGMAN ஆகிய பதிவு எண் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இரண்டு நபர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அந்த சோதனையில், அவர்கள் காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரது மகன் சுரேஷ் மற்றும் லூக்காஸ் ஆகியோர் என்பதும், அவர்கள் இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக பாண்டிச்சேரி சாராயத்தைப் பெருமளவு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

500 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய்  80,000 மதிப்புள்ள வாகனங்கள் பறிமுதல்

இந்தச் சோதனையின்போது, கடத்தி வரப்பட்ட 180 மி.லி. அளவுள்ள, மொத்தம் 500 எண்ணிக்கையிலான பாண்டிச்சேரி சாராயம் உள்ளடங்கிய மது பாட்டில்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மேலும், எதிரிகள் மது கடத்தலுக்குப் பயன்படுத்திய சுமார் ரூ. 80,000/- மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஒருவன் கைது, மற்றொருவன் தேடப்படும் குற்றவாளி

மேற்கண்ட குற்றச் செயலில் ஈடுபட்ட எதிரிகளில் ஒருவரான சுரேஷ் என்பவரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர். ஆனால், அவருடன் வந்த மற்றொரு எதிரியான லூக்காஸ், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார், அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோடி தலைமறைவாகியுளாளார். 

கைது செய்யப்பட்ட குற்றவாளி சுரேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தப்பியோடிய லூக்காஸ் என்பவரை விரைந்து கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூபாய் 80,000 மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள் இரண்டும் பொது ஏலம் விடுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை

சட்டவிரோத மதுபானக் கடத்தல் மற்றும் விற்பனைச் சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக மதுவிலக்கு குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என உறுதி 

பொதுமக்கள் மதுவிலக்கு குற்றம் சம்மந்தமாகப் புகார் அளிக்க விரும்பினால், இலவச உதவி எண்ணான 10581 அல்லது 8870490380 என்ற எண்ணிற்குத் தெரிவிக்குமாறு மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. புகார் அளிப்பவர்களின் ரகசியம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்றங்கள் குறித்து மேலும் ஏதேனும் விவரங்கள் 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Embed widget