மேலும் அறிய

கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!

கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் பணியாற்றிய வேலைக்காரப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில்,  வீ்ட்டில் பணியாற்றிய  24 வயதான சலவைத் தொழிலாளி ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞருமான  கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தைச்சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் மற்றும் திருச்சி தொகுதிகளின் எம்.பியாக இருந்தவர். இதோடு 1991 முதல் 1993 வரை மத்திய நீதி அமைச்சாராக ரங்கராஜன் குமாரமங்கலம் பதவி வகித்து வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு  ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவிற்கு பிறகு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் இவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வருகிறார். 67 வயதான இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தான் நேற்று கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் பணியாற்றும்  ஊழியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  • கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!

டெல்லியில் உள்ள ஆனந்த விகார் பகுதியில் வசித்துவரும் கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் மஞ்சு என்ற வேலைக்காரப்பெண் பணியாற்றிவருகிறார். இதோடு கடந்த 5 ஆண்டுகளாக ராஜூ என்ற சலலைத்தொழிலாளியும் அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று இரவு சலவைத்தொழிலாளி ராஜூ மற்றும் அவருடன் 2 பேர் வீட்டின் கதவினைத்தட்டிய நிலையில், தெரிந்தவர்கள் தான் என்று கதவினை திறந்துள்ளார் வேலைக்காரப்பெண். ஆனால் இவர்கள் அப்பெண்ணினைத்தாக்கியதோடு, வீட்டினுள் ஒரு அறையில் வைத்து அடைத்து விட்டனர். இதனையடுத்து கிட்டி மங்கலத்தின் அறைக்குச் சென்ற மர்ம நபர்கள் தலையணையினை வைத்து முகத்தில் அழுத்தி அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த சூட்கேஸ் மற்றும் கதவினை உடைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். இதனைக்கண்ட வேலைக்காரப்பெண், சத்தமிட்டதையடுத்து பக்கத்து வீட்டார்கள் வந்து வேலைக்காரப்பெண்ணிற்கு உதவியுள்ளனர்.

 இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், என்ன நடந்தது என தடயவியல் துறையின் உதவியோடு விசாரணை நடத்தினர். பின்னர் கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் பணியாற்றிய வேலைக்காரப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில்,  வீ்ட்டில் பணியாற்றிய  24 வயதான சலவைத் தொழிலாளி ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து  இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் கொலை சம்பவத்தில், ராஜூவினைத்தவிர்த்து இன்னும் இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களின் பெயரையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனவே கிட்டிகுமார மங்கலத்தின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரினை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

  • கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!

முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரின் இல்லத்திலேயே கொள்ளை சம்பவம் நடந்ததோடு, கிட்டி குமாரமங்கலத்தினையும் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலைக்கான உண்மை காரணம் குறித்தும், வேறு ஏதேனும் நிர்பந்தம் இருந்ததா என்றும் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget