மேலும் அறிய

இரும்பு கம்பி.. புலம்பல் நாடகம்.. தக்காளி மண்டி முன்பு உடல்.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி கைது.. என்ன நடந்தது?

ராயக்கோட்டையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கள்ளக்காதலன் உதவியுடன் தீர்த்து கட்டியதாக மனைவியையும் கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த  குட்டூரை கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பன் வயது ( 45) இவர் கூலித்தொழில் செய்துவருகிறார். இவருக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் ராயக்கோட்டை தக்காளிமண்டி அருகில் உள்ள மதுக்கடை முன்பு இறந்து கிடந்துள்ளார். இவரை யாரோ  தலையில் தாக்கிய காயம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக அவரது மனைவி குண்டம்மாள் வயது (35) ராயக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதில் தனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. என்னிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார்.  இதனால் நான் என்னுடைய கணவருக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு, போதையில் தவறி விழுந்து இறந்துள்ளார்’ என கூறிய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இரும்பு கம்பி.. புலம்பல் நாடகம்.. தக்காளி மண்டி முன்பு உடல்.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி கைது.. என்ன நடந்தது?

இந்த புகாரின் அடிப்படையில் ராயக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் மாரப்பனின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாரப்பன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்டமாக இறந்து போன மாரப்பனின் மனைவி குண்டம்மாளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். 

 


இரும்பு கம்பி.. புலம்பல் நாடகம்.. தக்காளி மண்டி முன்பு உடல்.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி கைது.. என்ன நடந்தது?

 

விசாரணையில் குண்டம்மாள் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்:-

எனக்கும், மாரப்பனுக்கும் திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடித்து விட்டு வந்து என்னிடம் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில்  எனக்கும், சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. சிவசங்கருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சிவசங்கர் என்னை அடிக்கடி தனிமையில் வந்து சந்திப்பார். இது எனது கணவருக்கு தெரிய வந்தது. அவர் என்னை பல முறை கண்டித்தார். இதனால் அவர் இருக்கும் வரையில் நாம் வாழ முடியாது என்று முடிவு எடுத்து. அவரை தீர்த்து விடலாம் என்று எனது கள்ளக்காதலனுக்கு ஐடியா நான் கொடுத்தேன். 

அதனையடுத்து  நான் கொடுத்த  திட்டத்தின்படி இரவு மது குடிப்பதற்காக வெளியே சென்ற எனது கணவரை, சிவசங்கர் அழைத்து சென்றார். அப்போது மது போதையில் இருந்தபோது எனது கணவரின் பின்புற மண்டையில் நான் இரும்பு கம்பியால் அடித்தேன். இதில் அவர் அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார் . இதையடுத்து தக்காளி மண்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நாங்கள் இருவரும் உடலை போட்டுவிட்டு அங்கு இருந்து தப்பித்துவிட்டோம் 

இரும்பு கம்பி.. புலம்பல் நாடகம்.. தக்காளி மண்டி முன்பு உடல்.. கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி கைது.. என்ன நடந்தது?

இந்நிலையில் மறுநாள், காணாமல் போன எனது கணவரை தேடி நடித்ததாகவும், அதில் எனது கணவர் உடல் மதுக்கடை அருகில் கிடந்ததாக நானே காவல்துறையினரிடம் தெரிவித்தேன். என்னிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு எனது கணவர் சென்றதாகவும், பின்னர் மது போதையில் கீழே விழுந்து இறந்ததாகவும், அனைவரையும் நம்ப வைத்தேன். ஆனால் எனது கணவரின் தலையில் இருந்த காயத்தை கொண்டு, அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்ததை காவல்துறையினர் எங்களை கண்டுபிடித்து விட்டனர்” எனக் கூறியுள்ளார்.

குண்டம்மாள், தனது கள்ளக்காதலன் சிவசங்கர் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குண்டம்மாளையும், சிவசங்கரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.  தகாத நட்புக்காக கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உறவினப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை !! சிவகங்கை வாலிபருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை
உறவினப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை !! சிவகங்கை வாலிபருக்கு 61 ஆண்டுகள் சிறை தண்டனை
இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
இதுவல்லவோ போலீஸ்! 'ட்ரிபிள்ஸ்' வந்த சிறுவர்களுக்கு அபராதம் போடாமல் சீர்காழி போலீஸ் கொடுத்த 'செம்ம' தண்டனை!
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
மயிலாடுதுறையில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை வெட்டிச் சாய்த்த திமுக கவுன்சிலர் மகன்! நடந்தது என்ன?
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
Premalatha TVK Cabinet : துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
துணை முதலமைச்சராகியிருப்பேன்.! விஜய் அமைச்சரவையில் இணையாதது ஏன்.? பிரேமலதா ஓபன் டாக்
ADMK Vs TVK: விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை - பகீர் உண்மைகள்
விஜய் வந்துடவே கூடாதுனு சொன்ன உதயநிதி- பொய் சொன்ன ரஜினி..! எ.வ.வேலு பார்த்த வேலை- பகீர் உண்மைகள்
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
கோவையில் களமிறங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா... விளையாட்டு வீரர்களுடன் நேரடி சந்திப்பு...
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...
மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்திய அமைச்சர்... விடுதி உணவு விவகாரத்தில் அதிரடி உத்தரவு...
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
DMK alliance Iuml : கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என ஏற்கனவே தெரியும்.! காதர் மொய்தீன் திடீர் ட்விஸ்ட்
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
கோவை வளர்ச்சிக்கு ‘கிரீன் சிக்னல்’... அதிகாரிகளுடன் ஆலோசனையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
Embed widget