மேலும் அறிய

தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

தலை, சுவரில் மோதி பாரதி சம்ப இடத்திலேயே இறந்தார். இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் விசயத்தை கூறி, பாரதியின் கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காடுமுச்சந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கா முனியப்பன் மகன் மாரேகவுடு வயது ( 38) இவர் விவசாயி. இவருடைய மனைவி பாரதி (28). ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்று  இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

தம்பதி இருவருக்கு இடையே  அடிக்கடி கருத்துமுரண்பாடுகள் வழக்கமாக ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்  கடந்த 26-ம் தேதி மாலை இருவர்களுக்கிடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது . இந்த தகராறு கைகலப்பில் முடிந்ததாக கூறப்படுகிறது . இதனால் மனமுடைந்த பாரதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மரேகவுடு அவரது உறவினர்களிடம் கூறியுள்ளார். 
 

 


தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!

 

இதனையறிந்த பாரதியின் தந்தை பைரப்பா,  தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில்  புகார் செய்தார். அதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக காடுமுச்சந்திரம் கிராமத்திற்கு சென்று இறந்த பாரதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் காவல்நிலைய ஆய்வாளர் சரவணன் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினார்.

 மேலும் மருத்துவமனையின் பிரேத பரிசோதனையின் முடிவில், பாரதியின் உடலில் அடித்ததற்கான உள்காயங்கள் உள்ளன எனவும். இவர் தூக்கு போட்டு இறக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது என பிரேத பரிசோதனை சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது.  இதனையடுத்து கணவர் மாரேகவுடை சந்தேகத்தின் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

 


தகாத உறவில் மனைவி: அடித்துக் கொன்ற கணவன்... தூக்கில் ஏற்றிய கொளுந்தன்! நாடகமாடி பிடிபட்டனர்!


காவல்துறை விசாரணையில் பாரதிக்கும், அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாரதியிடம் கணவர் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மாரேகவுடு,  மனைவியை சரமாறியாக அடித்துள்ளார். அப்போது பாரதியின்  தலை சுவரில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாரதி சம்ப இடத்திலேயே இறந்து விட்டதும், இதையடுத்து தனது தம்பி சூடேசிடம் விசயத்தை கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சகோதரர்கள் பாரதியின் கொலையை மறைக்க மனைவியின் உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அண்ணன், தம்பிகளான மாரேகவுடு, சூடேஷ் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மனைவியை அடித்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடகமாடியதும், அதற்கு கணவரின் தம்பி உதவியாக இருந்ததும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகராத உறவால் ஏற்பட்ட இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து, தொடர்பு இருப்பதாக கூறப்படும் நபரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.தாய்-தந்தை இடையே ஏற்பட்ட மோதலில் அவர்களது குழந்தைகள் தற்போது நட்டாத்தில் நிற்கின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget