மேலும் அறிய

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளி சிரஞ்சீவி (23)  வக்கீல் லே-அவுட் பகுதி வழியாக நடந்து சென்றபோது எதிரில் வந்த ஒருவர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1,500 பறித்து சென்றார். இதுகுறித்து சிரஞ்சீவி ஓசூர் மாநகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிரஞ்சீவியிடம் பணத்தை பறித்தது ஓசூர் மத்திகிரி காடிபாளையத்தை சேர்ந்த அப்ரித் (25) என தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

இதனை தொடர்ந்து ஓசூர் அரசனட்டி பாரதி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி முனியப்பன் (30)  சின்ன எலசகிரி சாந்தபுரம் ஏரி அருகே நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முனியப்பனை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 5000 பறித்து சென்றார். இது குறித்து அவர் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது கெலமங்கலம் சுல்தான்பேட்டையை சேர்ந்த சையத் அர்பஷ் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்த நிலையில் அவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஓசூரில் வெவ்வேறு இடங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது

அதே போல் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த காவலாளி செல்வகுமார் (44).  ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ. உள்வட்ட சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், செல்வகுமாரை கத்தி முனையில் மிரட்டி 1.5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இது குறித்து செல்வகுமார் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நகையை பறித்தது ஓசூர் அந்திவாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்த முரளி (19) என தெரிய வந்தது.

இதை அடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து 3 வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வழிப்பறி திருடர்களையும் கைது செய்த ஓசூர் காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஓசூர் பகுதியில் அதிகரித்து வரும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க காவல் துறையினரின் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
Mid Day Meals: இனி சைவ சத்துணவுதான்; மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்- எழும் எதிர்ப்புகள்!
DMK ELECTION PLAN: இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
இனி கூட்டணி இல்லை.! தேர்தலில் தனித்து போட்டி.? திமுகவினரை குஷியாக்க ஸ்டாலின் போட்ட செம பிளான்
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
TN EB Bill: 200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TVK DMK: தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்
தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
DMK EV VELU FIR CASE : எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
Tata Sumo: சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?
சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?
Embed widget