மேலும் அறிய

சாலை விபத்து ஏற்படுத்திய நபரை கடத்தி 1.5 லட்சம் கேட்டு மிரட்டல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது

தனியார் லாட்ஜில் கடத்தி சென்றதுடன் 1.5 லட்சம் பணம் கேட்டதுடன் பணம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று ஆல்வின் லாயுடு பர்கிடம் மிரட்டல் விடுத்துள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் லாயுடு பர்க் (31)  பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி பெங்களூரில் இருந்து தன்னுடைய காரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாரத விதமாக ஆல்வின் லாயுடு பர்க் தனது காரை மோதி உள்ளார். அதில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று நபர்களும் கீழே விழுந்து காயமடைந்து உள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்படுத்திய நபரை கடத்தி 1.5 லட்சம் கேட்டு மிரட்டல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது

இந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஆல்வின் லாயுடு பர்க் இந்த விபத்து குறித்து காவல் நிலையத்திற்க்கு சென்றுவிடலாம் என்று அங்கு உள்ளவர்களிடம் கூறி உள்ளார். ஆனால் அவ்வழியாக வந்த மூன்று நபர்கள் கொண்ட கும்பல் அவரை தடுத்து நிறுத்தி இந்த விபத்து குறித்து காவல் நிலையம் செல்ல வேண்டாம் எனவும், இதை சுமூகமாக நாமே பேசி முடித்துக்கொள்ளலாம் எனவும் கூறி உள்ளனர். இதனை நம்பிய ஆல்வின் லாயுடு பர்க் அவர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை காவேரிபட்டினத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கடத்தி சென்று அடைத்து வைத்து அவரை மிரட்டி 1.5 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் உன்னை விடுவிக்க முடியாது என்று கூறியும் உன்னை கொன்றுவிடுவோம் என்று ஆல்வின் லாயுடு பர்கை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்படுத்திய நபரை கடத்தி 1.5 லட்சம் கேட்டு மிரட்டல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது

அதனை தொடர்ந்து அச்சமடைந்த ஆல்வின் லாயுடு பர்க் இதுகுறித்து அவருடைய தந்தையிடம் தகவல் அளித்துள்ளார். பின்னர் ஆல்வின் லாயுடு பர்க் தந்தை காவேரிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உடனடியாக இந்த கடத்தல் சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் ஆல்வின் லாயுடு பர்கை கடத்தியவர்கள் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், அன்பரசன் மற்றும் லோகநாதன் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட கும்பல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆல்வின் லாயுடு பர்கை மீட்டனர். பின்னர் அவர்கள் மூன்று நபர்கள் மீதும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை கடத்திச்சென்று 1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவேரிப்பட்டினம் பகுதியில் இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
IND Vs SA T20: ஆண்டின் கடைசிப் போட்டி.. வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று தெ.ஆப்., 5வது டி20
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் பரபரப்பு! செவிலியர்கள் போராட்டம்: மின் நிறுத்தம்! செவிலியர்கள் கைது!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
TVK Vijay: டிவில விஜய் படமே போட மாட்டுக்காங்க.. கதறி அழுத சிறுமி.. வைரலான வீடியோ!
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Nissan Cars 2026: ஐ அம் பேக்..! க்ராவைட், மேக்னைட், டெக்டான், 7 சீட்டர் - 2026ல் புதுப்புது கார்களை இறக்கும் நிசான்
Udhayanidhi Vs Vijay: “அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
“அவர பேசவிட்டு பாருங்க, அப்போ தெரியும்“; விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி; என்ன கூறினார்.?
PM Modi Oman: “இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
“இந்திய பொருளாதாரத்தின் டிஎன்ஏ மாற்றியுள்ளது“; ஓமனில் பிரதமர் மோடி பேசியது என்ன.?
Embed widget