மேலும் அறிய

சாலை விபத்து ஏற்படுத்திய நபரை கடத்தி 1.5 லட்சம் கேட்டு மிரட்டல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது

தனியார் லாட்ஜில் கடத்தி சென்றதுடன் 1.5 லட்சம் பணம் கேட்டதுடன் பணம் தரவில்லை என்றால் கொன்றுவிடுவோம் என்று ஆல்வின் லாயுடு பர்கிடம் மிரட்டல் விடுத்துள்ளனர்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் லாயுடு பர்க் (31)  பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி பெங்களூரில் இருந்து தன்னுடைய காரில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம் பகுதியில் முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாரத விதமாக ஆல்வின் லாயுடு பர்க் தனது காரை மோதி உள்ளார். அதில் இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த மூன்று நபர்களும் கீழே விழுந்து காயமடைந்து உள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்படுத்திய நபரை கடத்தி 1.5 லட்சம் கேட்டு மிரட்டல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது

இந்த நிலையில் காரை ஓட்டி வந்த ஆல்வின் லாயுடு பர்க் இந்த விபத்து குறித்து காவல் நிலையத்திற்க்கு சென்றுவிடலாம் என்று அங்கு உள்ளவர்களிடம் கூறி உள்ளார். ஆனால் அவ்வழியாக வந்த மூன்று நபர்கள் கொண்ட கும்பல் அவரை தடுத்து நிறுத்தி இந்த விபத்து குறித்து காவல் நிலையம் செல்ல வேண்டாம் எனவும், இதை சுமூகமாக நாமே பேசி முடித்துக்கொள்ளலாம் எனவும் கூறி உள்ளனர். இதனை நம்பிய ஆல்வின் லாயுடு பர்க் அவர்களுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் அவரை காவேரிபட்டினத்தில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் கடத்தி சென்று அடைத்து வைத்து அவரை மிரட்டி 1.5 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தரவில்லை என்றால் உன்னை விடுவிக்க முடியாது என்று கூறியும் உன்னை கொன்றுவிடுவோம் என்று ஆல்வின் லாயுடு பர்கை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்படுத்திய நபரை கடத்தி 1.5 லட்சம் கேட்டு மிரட்டல் - கிருஷ்ணகிரியில் 3 பேர் கைது

அதனை தொடர்ந்து அச்சமடைந்த ஆல்வின் லாயுடு பர்க் இதுகுறித்து அவருடைய தந்தையிடம் தகவல் அளித்துள்ளார். பின்னர் ஆல்வின் லாயுடு பர்க் தந்தை காவேரிபட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் உடனடியாக இந்த கடத்தல் சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணை நடத்தியதில் ஆல்வின் லாயுடு பர்கை கடத்தியவர்கள் காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த சந்தோஷ், அன்பரசன் மற்றும் லோகநாதன் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட கும்பல் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து ஆல்வின் லாயுடு பர்கை மீட்டனர். பின்னர் அவர்கள் மூன்று நபர்கள் மீதும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். விபத்து ஏற்படுத்தியவரை கடத்திச்சென்று 1.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவேரிப்பட்டினம் பகுதியில் இதுபோன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
Embed widget