மேலும் அறிய

Kerala Human Sacrifice : கேரளா நரபலி: பெண்ணை 56 பாகங்களாக வெட்டி சாப்பிட்ட கொடூரம்?...பகீர் கிளப்பும் தகவல்கள்..

நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் இன்று அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர்.

கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இச்சூழலில், இது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு பெண்களை, ஒரு தம்பதி நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

நரபலி சடங்கின்போது, இரண்டு பெண்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் அந்த உடல் பாகங்களை அந்த தம்பதியினர் சாப்பிட்டிருப்பதாக காவல்துறையினர் இன்று அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகியோரின் கழுத்தை நெரிப்பதற்கு முன்பு அவர்கள் கட்டிவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களின் மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு ரத்தம் சம்பவ இடம் முழுவதும் பரவ செய்துள்ளனர். அதில், ஒரு உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட உடல் பாகங்கள் மூன்று குழிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை காவல்துறை தலைமையே பகிர்ந்துள்ளார்.

முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரான முகமது ஷஃபி, பாலியல் வக்கிரம் கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மற்றவர்களை துன்புறுத்தி அதில் அவர் இன்பம் கண்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, குற்றம்சாட்டப்பட்ட பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலாவின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

2020 ஆம் ஆண்டு, 75 வயதான பெண் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் ஷஃபி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆபாசப் படத்தில் நடிக்க பணம் தருவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களை ஷபி அழைத்து வந்துள்ளார்.

அதே நேரத்தில், பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோரின் நிதிக் கஷ்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவும், பணக்காரர்களாகவும் ஒரு நரபலியை நடத்துமாறு அவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

இதுகுறித்து கேரள காவல்துறை தலைவர் சி.எச். நாகராஜு பேசுகையில், "பாதிக்கப்பட்டவர்களைக் கொன்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடலின் பாகங்களைச் சாப்பிட்டிருக்கலாம். இது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை" என்றார். பகவல் சிங், மசாஜ் தெரபிஸ்ட்டாக உள்ளார். சமூக வலைதளங்களில், அவருக்கு என பின்தொடர்பாளர்கள் உள்ளனர். மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறுத்துள்ளது.

ஜூன் மாதம் ரோஸ்லினும் செப்டம்பர் மாதம் பத்மாவும் காணாமல் போயுள்ளனர். பத்மா காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அந்த பெண்களின் ஃபோன்கள் ஷாபியிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அவர் விட்டுச் சென்ற கார் ஆகியவற்றின் உதவியுடன் அவரைக் கண்டுபிடித்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக பத்தனம்திட்டாவில் உள்ள வீட்டிற்கு போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். அங்கு பகவல் சிங்கும் அவரது மனைவியும் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget