மேலும் அறிய

நிர்வாண வீடியோக்கள், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை - காங்கிரஸ் எம்எல்ஏ மீது பெண் பரபரப்பு புகார் - நடந்தது என்ன?

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜாமீனில் வெளிவர முடியாதபடி காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பிர் ராகுல் மம்கூத்ததில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட பெண் முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாலக்காடு எம்.எல்.ஏ. மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் எம்எல்ஏ மீது பாலியல் வழக்கு

பாலக்காடு எம்.எல்.ஏ ராகுல் மம்கூத்ததில் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் கட்டாய கருக்கலைப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல் தகவல் அறிக்கையில் ஜாமீனில் வெளிவர முடியாத பல பிரிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவரது நண்பர் ஜோபி ஜோசப்பையும் கேரள போலீசார் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் 4ஆம் தேதி  திருவனந்தபுரம், திருக்கண்ணபுரத்தில் உள்ள அவரது பிளாட்டில் ராகுல், அந்தப் பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் மார்ச் 17 ஆம் தேதி அதே பிளாட்டில், ராகுல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நிர்வாண வீடியோக்களை அவரது அனுமதியின்றி தனது மொபைல் போனில் பதிவு செய்து, அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை யாரிடமாவது கூறினால், ‘அவருடைய வாழ்க்கையை அழித்துவிடுவேன்" என்று எம்எல்ஏ எச்சரித்ததாக எப்ஐஆர்இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்திருந்தும், ராகுல் ஏப்ரல் 22 ஆம் தேதி திருக்கண்ணபுரம் பிளாட்டில் மீண்டும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் மே மாதம் பாலக்காட்டில் உள்ள எம்எல்ஏவின் பில்ட் டெக் சம்மிட் பிளாட்டில் இரண்டு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.

மே 30 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள கைமனத்தில் இருந்து தப்பிப்பிழைத்த பெண்ணை, ராகுலின் நெருங்கிய நண்பரான ஜோபி ஜோசப் காரில் அழைத்துச் செல்லும்போது கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், ராகுல், பாதிக்கப்பட்ட பெண்ணை மாத்திரைகளை சாப்பிட கட்டாயப்படுத்தியதாகவும், இதன் விளைவாக கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும், மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மீண்டும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

ஜாமீனில் வெளிவரமுடியாதபடி வழக்குப்பதிவு

பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023 இன், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலியல் வன்கொடுமைக்கான பிரிவு 64, ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான பிரிவு 64(2), அறக்கட்டளைப் பதவியில் உள்ள ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான பிரிவு 64(f), கர்ப்பமாக இருப்பதை அறிந்தும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததற்கான பிரிவு 64(h), மற்றும் அதே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான பிரிவு 64(m) ஆகியவை அடங்கும். ஒரு பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவை ஏற்படுத்துவதற்கான பிரிவு 89, நம்பிக்கையை குற்றமாக மீறுவதற்கான பிரிவு BNS 316 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 64 e (ஒப்புதல் இல்லாமல் ஒரு நபரின் நிர்வாணத்தைப் படம்பிடித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் குற்றங்களுக்கு ஒட்டுமொத்தமாக பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
சீர்காழி அருகே பயங்கரம்: நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறில் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்..!
கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி
கடலூரில் ரவுடி வெட்டிக்கொலை - வயல்வெளியில் சிதறிக்கிடந்த இரத்தம்; மக்கள் அதிர்ச்சி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
பிஞ்சு உயிரைப் பறித்த கரம்.. கோர்ட் காவலில் கருணாஸ்: தண்டனை குறித்த திக் திக் நிமிடங்கள் !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Nainar Nagendran: விஜய் ஜெயித்தால் ஆதரவு கேட்கும் முடிவில் பாஜக? - நயினார் நாகேந்திரன் பதில்!
Trump US Iran War: “நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
“நான் ஏன் அத உங்க கிட்ட சொல்லணும்.?“; செய்தியாளர்களிடம் கோபமடைந்த ட்ரம்ப்; அப்படி என்ன கேட்டாங்க.?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
Velmurugan: லட்சக்கணக்கில் பேரம்.. வேல்முருகனுடன் டீல் பேசிய விஜய் தரப்பு.. நடந்தது என்ன?
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Power Cut: கொளுத்தும் கோடை வெயில்... தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வரும் மின்வெட்டு!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
AC Vs Cooler Vs Fan: வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
வெயில் தாங்க முடியலையா.? ஏசி, கூலர், ஃபேன்; இவற்றிலிருந்து அதிகபட்ச கூலிங்கை எப்படி பெறுவது.? இதோ டிப்ஸ்
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Embed widget