மேலும் அறிய

Crime : சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

கரூர் மாவட்டத்தில் சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அந்த சிறுமி தனியாக இருக்கும்போது எல்லாம் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமையின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது திருமுருகன் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையை கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.


Crime : சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

இதுகுறித்து சிறுமியின் தாய் கடந்த 8.7.2021 அன்று குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், 3 பிரிவுகளின் கீழ் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து திருமுருகனை குளித்தலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை எடுத்து 23.7.2021 அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. Crime : சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார். அதில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. 


Crime : சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

மேலும் அனைத்து தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஏக காலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் திருமுருகன் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.


கரூர் அருகே டிப்பர் லாரி மோதி கோர விபத்து.

சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மருமகன், மாமியார் உடல் நசுங்கி பலி. கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில்  வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.


Crime : சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

இந்நிலையில் நேற்று பாலவிடுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் அவரது மாமியார் சுசிலா ஆகியோர் இருசக்கரவாகனத்தில்  சென்று விட்டு, இரவு வீடு திரும்பியபோது வெள்ளியணை அருகே வந்து கொண்டிருந்தபோது கிரானைட் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் இருவரும் மாட்டிக்கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


Crime : சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

உயிரிழந்த கனகராஜ் மற்றும் சுசிலா ஆகியோரின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
உணவில் விஷம் !! அப்புறம் காதில்..! கடனில் இருந்து தப்பிக்க கணவனைக் கொல்ல முயன்ற மனைவி
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
குடும்ப தகராறில் மைத்துனர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த அண்ணன்
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
போலி மருந்து வழக்கு: சிபிஐ விசாரணையை முடக்க ரூ.3 கோடி லஞ்சம்: ஐபிஎஸ் அதிகாரி கைது! சிக்கியது ஹார்டு டிஸ்க் !
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
C. Vijayabasker : ’இது ட்ரெய்லர்தான்’ இணைப்பு விழாவில் மாஸாக பேசிய சி.விஜயபாஸ்கர்..!
’இது ட்ரெய்லர்தான்’ சி.விஜயபாஸ்கர் மாஸ் பேச்சு..!
EV Two Wheeler Sales: எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
எகிறிய இ ஸ்கூட்டர் விற்பனை! TVSதான் டாப்பு... ஜுன் மாதத்தில் மத்தவங்க எப்படி?
JanaNayagan Censor: மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
மீண்டும் ஜனநாயகன்..! சென்சாரில் கிடைத்த A சர்டிஃபிகேட்? ஜுலையில் CM விஜய் படம் ரிலீஸ்?
Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
481 கி.மீட்டர் மைலேஜ்! இளசுகளின் பல்சை ஏத்தும் Hero Xpulse 210 - விலை எவ்ளோ?
481 கி.மீட்டர் மைலேஜ்! இளசுகளின் பல்சை ஏத்தும் Hero Xpulse 210 - விலை எவ்ளோ?
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TATA Sierra or Mahindra XEV 9e: EV சந்தையின் புதிய ராஜா யார்? டாடா சியரா vs மஹிந்திரா XEV 9e - முழு ஒப்பீடு!
TN Bypolls: : 7 தொகுதி இடைத்தேர்தல் எப்போது.? ஆகஸ்ட்டில் தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்- வெளியான முக்கிய தகவல்
7 தொகுதி இடைத்தேர்தல் எப்போது.? ஆகஸ்ட்டில் தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்- வெளியான முக்கிய தகவல்
Embed widget