மேலும் அறிய

கரூரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

சிறுவன் நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து அவர் கரூரில் வசிக்கும் சிறுவனின் தாயாரிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

 


கரூரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

 

 

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பாலியல் வன்கொடுமை 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தான். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 27ந் தேதி இரவு அந்தசிறுவன் அருகே உள்ள கடைக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்தான். அப்பொழுது அந்த சிறுவனை வழிமறித்த ஆனந்த் என்கிற அறிவானந்தம் (வயது 29) என்பவர் சற்று தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பள்ளியின் கேட் மூடி இருந்ததால் சிறுவனை சுற்றுச்சுவரில் ஏற்றிவிட்டு பிறகு அந்த சிறுவனை பள்ளி வளாகத்திற்குள் இறக்கி விட்டு தானும் உள்ளே குதித்து சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

கைது

 

 


கரூரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

இதில் பயந்து போன அந்த சிறுவன் நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து அவர் கரூரில் வசிக்கும் சிறுவனின் தாயாரிடம் போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் கடத்தல், போக்சோ, கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அறிவானந்தை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு கூறினார்.

20 ஆண்டுகள் சிறை

இதில் சிறுவனை கடத்திய குற்றத்திற்காக அறிவானந்தனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டதவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுப்பதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

 


கரூரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை


அதன்படி, அறிவானந்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூ. 1 1/2 லட்சம் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த  கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
பற்றி எரியும் EVM விவகாரம்.. OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் விளக்கம்!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Embed widget