மேலும் அறிய

கரூர் அருகே கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி - 5 பேர் கைது

மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், கரூர் டிஎஸ்பி தேவராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள அய்யம்பாளையம் பிரிவு அருகே வெங்கமேடு பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25), மற்றும் இவரது தாத்தா பொன்னுச்சாமி (72) ஆகிய இருவரும் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மஞ்சுநாயக்கன்பட்டிக்கு கோழி சந்தையில், கோழி வாங்க பைக்கில் சென்றனர்.


கரூர் அருகே கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி - 5 பேர் கைது

அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் பைக்கை வழிமறித்து, அவர்களிடமிருந்து ரூ.14 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு தப்பி ஓடியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், கரூர் டிஎஸ்பி தேவராஜ் மேற்பார்வையில், பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.


கரூர் அருகே கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி - 5 பேர் கைது

கடந்த 7ம் தேதி போலீசார் வெள்ளியணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியின் வழியாக வந்த காரை சோதனையிட்டபோது, காரில் வந்த கரூரை சேர்ந்த துரைப்பாண்டி, மணிகண்டன், பரத், முகேஷ், முருகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கோழி வியாபாரிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,000 மற்றும் கார் மற்றும் ஒரு இரண்டு சக்கர வாகனங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்ட பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பாராட்டினார்.


வேலாயுதம்பாளையம் அருகே 304 கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர் கைது

கரூர் மாவட்டம், புன்னம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பல்வேறு வகையான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், பெரியசாமி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் புன்னம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முருகன் என்பவரது கடையில் ஏராளமான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்து முருகன் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


கரூர் அருகே கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி - 5 பேர் கைது

விசாரணையில் நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலம், புதூர் ரோடு பகுதியை சேர்ந்த முனியசாமி (வயது 42) என்பவர் காரில் கொண்டு வந்து புகையிலை பொருட்களை கொடுத்துச் சென்றதாக கூறினார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கொண்ட குழுவினர் ஆத்தூர் தான பரப்பு நெடுஞ்சாலையில் உள்ள மூர்த்தி பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.


கரூர் அருகே கோழி வியாபாரிகளிடம் வழிப்பறி - 5 பேர் கைது

அப்போது அந்த வழியாக அதிவேகமாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த காரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனை நடத்தியதில் அந்த காருக்குள் இருந்த சாக்கு மூட்டைகளில் சுமார் 300 கிலோவுக்கு மேல் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும், காரையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பெயரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Regulation of private schools : பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு.! இந்த நிகழ்ச்சியெல்லாம் நடத்த தடை- வெளியான அரசாணை
Embed widget