மேலும் அறிய

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!

திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்ற நிலையில் திடீரென சிவண்ணா, நாகரத்னா, ரக்‌ஷிதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் திருமணத்திற்கு முதல் நாள் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள டி.நரசிபுரா தாலுகாவில் உள்ள ஹலேகெம்பய்யனஹுண்டி  கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா என்பவர் தனது மனைவி நாகரத்னா மற்றும் மகள் ரக்‌ஷிதாவுடன் வசித்து வந்தார். 21 வயது மகள் ரக்‌ஷிதாவுக்கு ஜூன் 24ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்ற நிலையில் திடீரென சிவண்ணா, நாகரத்னா, ரக்‌ஷிதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஹலேகெம்பய்யனஹுண்டி   கிராமத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவம் குறித்து வருணா காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று பேர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

மேலும் சிவண்ணா வீட்டை சோதனை செய்ததில் அதில் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதனை மகள் ரக்‌ஷிதா கைப்பட எழுதியிருந்தார். அதாவது,  உல்லாஸ் கௌடா என்ற உள்ளூரைச் சேர்ந்த நபர் தனக்கு அனுப்பிய குறுந்தகவல்களையும்,  சில புகைப்படங்களையும் வைத்துக்கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு துன்புறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கும் அனுப்பி உல்லாஸ் கௌடா டார்ச்சர் செய்தார். 

இதனால் எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்கிற பயத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் மூவரின் தற்கொலைக்கு உல்லாஸ் கௌடா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்தை நிறுத்துவதாக உல்லாஸ் கௌடா ரக்‌ஷிதாவை மிரட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் சிவண்ணாவுக்கு நன்கு பழக்கப்பட்டவராக இருந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வரும் வரும் உல்லாஸ் கௌடா  ரக்‌ஷிதாவைத் திருமணம் செய்ய விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உல்லாஸ் கௌடா இதனை கெடுக்க திட்டமிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட உல்லாஸ் கௌடாவைக் கைது செய்வதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர்.  அவர் கைது செய்யப்படும் வரை உயிரிழந்தவர்கள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என காவல்துறையினரிடம் சிவண்ணா உறவினர்களும், கிராம மக்களும் வாக்குவாதம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய உதவியாளர் சி. டி. குமார் போராட்டகாரர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Minister Ramesh warning : ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
ரூ.100 கோடியில் சொத்து பதிவா.!! பொய் தகவலை பரப்பியவர்களை விட மாட்டேன்- சீறிய அமைச்சர் ரமேஷ்
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Embed widget