மேலும் அறிய

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!

திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்ற நிலையில் திடீரென சிவண்ணா, நாகரத்னா, ரக்‌ஷிதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணும், அவரது பெற்றோரும் திருமணத்திற்கு முதல் நாள் குடும்பத்தோடு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் மைசூரு மாவட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள டி.நரசிபுரா தாலுகாவில் உள்ள ஹலேகெம்பய்யனஹுண்டி  கிராமத்தைச் சேர்ந்த சிவண்ணா என்பவர் தனது மனைவி நாகரத்னா மற்றும் மகள் ரக்‌ஷிதாவுடன் வசித்து வந்தார். 21 வயது மகள் ரக்‌ஷிதாவுக்கு ஜூன் 24ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

திருமணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்ற நிலையில் திடீரென சிவண்ணா, நாகரத்னா, ரக்‌ஷிதா ஆகிய 3 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் ஹலேகெம்பய்யனஹுண்டி   கிராமத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவம் குறித்து வருணா காவல் நிலையத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று பேர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

மேலும் சிவண்ணா வீட்டை சோதனை செய்ததில் அதில் தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது. அதனை மகள் ரக்‌ஷிதா கைப்பட எழுதியிருந்தார். அதாவது,  உல்லாஸ் கௌடா என்ற உள்ளூரைச் சேர்ந்த நபர் தனக்கு அனுப்பிய குறுந்தகவல்களையும்,  சில புகைப்படங்களையும் வைத்துக்கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு துன்புறுத்தினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கும் அனுப்பி உல்லாஸ் கௌடா டார்ச்சர் செய்தார். 

இதனால் எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்கிற பயத்தில் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் மூவரின் தற்கொலைக்கு உல்லாஸ் கௌடா தான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திருமணத்தை நிறுத்துவதாக உல்லாஸ் கௌடா ரக்‌ஷிதாவை மிரட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் சிவண்ணாவுக்கு நன்கு பழக்கப்பட்டவராக இருந்துள்ளார். அடிக்கடி வீட்டுக்கு வரும் வரும் உல்லாஸ் கௌடா  ரக்‌ஷிதாவைத் திருமணம் செய்ய விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த உல்லாஸ் கௌடா இதனை கெடுக்க திட்டமிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட உல்லாஸ் கௌடாவைக் கைது செய்வதில் கிராம மக்கள் உறுதியாக இருந்தனர்.  அவர் கைது செய்யப்படும் வரை உயிரிழந்தவர்கள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என காவல்துறையினரிடம் சிவண்ணா உறவினர்களும், கிராம மக்களும் வாக்குவாதம் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய உதவியாளர் சி. டி. குமார் போராட்டகாரர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
UDHAYANIDHI VS VIJAY : தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
CM Vijay Live: சட்டமன்றத்தில் கொந்தளித்த விஜய்.. எதிர்க்கட்சிகளுக்கு சரமாரி பதிலடி... நேரலை இதோ!
Embed widget