![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Crime: அதிர்ச்சி.. பிணவறையில் நர்சுகளுடன் ஆபாச செயல்பாடுகள் .. இறந்த பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த கொடூரம்..
கர்நாடகா அருகே நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படமெடுத்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
![Crime: அதிர்ச்சி.. பிணவறையில் நர்சுகளுடன் ஆபாச செயல்பாடுகள் .. இறந்த பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த கொடூரம்.. Karnataka Police lookout an employee who flirted with nurses and filmed unclothed bodies of women in a mortuary Crime: அதிர்ச்சி.. பிணவறையில் நர்சுகளுடன் ஆபாச செயல்பாடுகள் .. இறந்த பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த கொடூரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/14/9b43d9aef99ec909eac4863288041b011668404109637571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கர்நாடகா அருகே நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படமெடுத்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான சையத். இவர் கடந்த 2021 ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த பிணவறை ஊழியராக பணிக்கு அமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பால கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக சையதுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த சூழலில் கடந்த மாதம் சையத் மடிகேரியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து தாக்கி காவல்துறையில் ஒப்படைத்தனர். சிறிது காலம் சிறையில் இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளிவந்ததாக கூறப்படுகிறது. சையதை கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த செல்போனை காவல்துறையில் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
ஒப்பந்த பிணவறை ஊழியராக பணிபுரிந்த சையத், அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நர்சுகள், இளம்பெண்கள் மருத்துமனை பெண் ஊழியர்களுடன் ஆபாசமாக பேசியது, அவர்களுடன் பிணவறையில் உல்லாசமாக இருந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருந்தார். அதேபோல், விபத்து மற்றும் தற்கொலை செய்துகொண்டு இறந்து பிணவறைக்கு வரும் பெண்களின் உடலை நிர்வாணமாக படமும் எடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவுகளும் அந்த செல்போனில் இருந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அனைவரிடமும் அன்பாக பழகும் சையத், தனது வலையில் விழுகும் பெண்கள் மற்றும் நர்சுகளை பிணவறைக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார். தொடர்ந்து பிணவறைக்கு வரும் இளம்பெண்களின் உடல்களை நிர்வாணமாக புகைப்படமும், ஆபாசமாக வீடியோவாகவும் எடுத்து ரசித்து வந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.
இதையடுத்து, இதுதொடர்பாக காவல்துறையினர் அரசு மருத்துவமனை டீன் கரியப்பாவுக்கு தகவல் அளித்து, வீடியோ எடுத்த சையத் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சையதை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், பிணவறை ஊழியர்கள் மற்றும் சையத்துடன் பழகி வந்த நர்சு, பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)