மேலும் அறிய

குமரி : காருக்குள் தொழிலதிபர் கொடூர கொலை.. மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை: நடந்தது என்ன?

தடயங்கள் மற்றும் ஒருவர்  காரிலிருந்து இறங்கி செல்லும் காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காருக்குள் கழுத்தறுத்து கொலை:

குமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றாமரம் பகுதி உள்ளது. இது குமரி- கேரள எல்லைப்பகுதியாகும். இங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நேற்று முன் தினம் இரவு 11.30 மணியளவில் கேரள பதிவெண் கொண்ட  சொகுசு கார் ஒன்று வெகு நேரமாக நின்று உள்ளது.  காருக்குள்  டிரைவர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த களியக்காவிளை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர், தொடர்ந்து கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் ஒருவர் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதை கண்ட காவல்துறையினர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முடிவு செய்தனர்.

ஆதாரில் அடையாளம் தெரிந்தது:

தொடர்ந்து   அந்த  காரில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த தீபு , தந்தை பெயர் சோமன் , திலீப் பவன், விவேக் நகர், கைனம், பாப்பனம்கோடு P.O., திருவனந்தபுரம் என்ற முகவரியில் உள்ள ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதனைக்கொண்டு கொலை செய்யப்பட்டவர் கேரளாவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார் அதில்  பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையை துவக்கி உள்ளனர். குறிப்பாக கொலைக்கு பின் காரில் இருந்து ஒருவர் இறங்கி நடந்து செல்வது போன்ற காட்சிகளையும் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து ஆதாரில் உள்ள முகவரிக்கு சென்று உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபர் தீபு என்றும் அவருக்கு ஒரு மனைவியும், 2 மகன்களும் இருப்பது தெரிய வந்தது. மேலும் மனைவி  பாலக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

தொழிலதிபரான தீபு:

தீபு திருவனந்தபுரத்தில் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். அதோடு பொக்லைன் எந்திரங்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்த  நிலையில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்குவாரி மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்குவாரியை மீண்டும் திறப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கிடையில் புதிய பொக்லைன் எந்திரம் வாங்குவதற்காக தீபு நேற்று முன் தினம் 10 லட்சம் பணத்துடன் காரில் மதுரைக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் தான் குமரி மாவட்டத்தில் காருக்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கொலை குறித்து பகீர் தகவல்:

இதனிடையே காரில் 10 லட்சம் பணத்துடன் புறப்பட்ட தீபு வரும் வழியில் ஒருவரை காரில் ஏற்றி வந்ததாக தெரிகிறது.. அதோடு தீபு வைத்திருந்த 10 லட்சம் பணத்தையும் காணவில்லை. எனவே தீபு ஏற்றி வந்த நபர் அவரிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை கொலை செய்து விட்டு பணத்தை எடுத்து சென்றிருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு கொலை நடந்த இடத்தில் கிடந்த தடயங்கள் மற்றும் ஒருவர்  காரிலிருந்து இறங்கி செல்லும் காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றிய போலீசார் இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்தும் தீவிரமாக  விசாரணை மேற்கொண்டு வருவதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர். பணத்திற்காக தொழிலதிபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் உறவினர்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Embed widget