மேலும் அறிய

Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?

sriperumbudur news : ஸ்ரீபெரும்புதூர் அருகே நகை கடையில் பூட்டை உடைத்து திருடிய கொள்ளையர்களை கோட்டை விட்ட போலீஸ், 10 நாட்களுக்குப் பின்னர் பிடிபட்ட கொள்ளையர்கள்.

காவலர்கள் அதிர்ச்சி
 
ஸ்ரீபெரும்புதூர் ( sriperumbudur news ) : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவந்தாங்கல் பாஞ்சாலப்பட்டு , பகுதியில் வசித்து வருபவர் பிரவீன். இவர் அதே பகுதியில் கௌதம் என்ற கடையின் பெட்யரில் கோல்ட் சில்வர் & கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி நள்ளிரவில் சிவந்தாங்கல் மற்றும் பாஞ்சாலப்பட்டு பகுதியில் இரண்டு போலீசார் இருசக்கர வாகனத்தில்,  ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது,  போலீசாரை பார்த்து பாஞ்சாலப்பட்டில் உள்ள கௌதம் நகைக்கடையிலிந்து வெளியே வந்த இரண்டு வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்த இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் வந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
காவல்துறையினர் கோட்டை விட்டது 
 
கடையிலிருந்து வெளியே ஓடிய இரண்டு இளைஞர்களோடு,  வந்த மற்றொரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து போலீசார் கையில் அகப்படாமல் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர். போலீசார் அன்று இரவு முழுவதும் தேடியும் மூன்று கொள்ளையர்களும் அகப்படவில்லை. சுற்றுவட்டார காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை காவல்துறையினர் உஷார் படுத்தியும் மூன்று பேர் லாபமாக தப்பி சென்றனர். கையும் களவுமாக கொள்ளையர்களைப் பிடிக்க வேண்டிய இடத்தில், காவல்துறையினர் கோட்டை விட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?
 
சிசிடிவி காட்சி
 
மேலும் நகைக்கடையின் உரிமையாளர் பிரவினை வரவழைத்து,  நகை கடைக்குள் சென்று பார்த்த பொழுது ஒரு கிலோ வெள்ளி திருடு போயிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவான கொள்ளையர்கள் சென்னை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Crime: எவ்வளவோ முயற்சித்த போலீஸ்..! ஜஸ்ட் மிஸ்ஸான கொள்ளையர்கள்.. 10 நாள் கழித்து காத்திருந்த ட்விஸ்ட்..! நடந்தது என்ன ?
 
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை
 
கொள்ளையர்களின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டபோது, சென்னை எழில் நகரை சேர்ந்த பருக்ஷேக் வ/24, KKநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ) கொட்டா கார்த்திக் ஆகிய இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ஒருவரான கருப்புசாமி தப்பி சென்று விட்டார். இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது தாங்கள் திருடிய வெள்ளி பொருட்களை போரூரிள்ள வாஷிமிடம் விற்றதாக கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து போரூர் சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வாஷிமை கைது செய்து வாசிமிடமிருந்த உருக்கிய நிலையில் ஒரு கிலோ வெள்ளியை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து பரூக் ஷேக், கார்த்திக் (எ) கொட்டா கார்த்திக்,வாஷிம் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான கருப்பு சாமியை போலீசார் தேடி வருகின்றனர். 10 நாட்களுக்கு முன்பு தப்பிச்சென்ற குற்றவாளிகளை போலீசார் தற்பொழுது பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
EV Car Charging : மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
மின்சார கார் வாங்குபவர்களுக்கு இனி ஜாலி.! அசத்தலான திட்டத்திற்கு பிளான் போட்ட தமிழக அரசு
Embed widget