மேலும் அறிய

தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் - பொருளாதார குற்றப்பிரிவு அழைப்பு

கள்ளக்குறிச்சி நபரிடம் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு தகவல்

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நபரிடம் தங்க நகை சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சேர்ந்து ஏமாற்றமடைந்த நபர்கள் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 தங்க நகை சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு லாபகரமான திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறி, ஏராளமான பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி என்பவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த சவுந்தரராஜ் (69) என்பவர், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி (49) என்பவர், கடந்த 2023 அக்டோபர் 1 முதல் 2024 அக்டோபர் 1 வரையிலான காலகட்டத்தில், கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை மெயின் ரோட்டில் உள்ள மேல்சிறுவள்ளூர் கூட்ரோட்டில் “பீனிக்ஸ் சூப்பர் மார்கெட்” என்ற பெயரில் கடை நடத்தி வந்தார் என கூறியுள்ளார்.

இந்தக் கடையின் வாயிலாக அவர்,

  • தங்க சேமிப்பு திட்டம்
  • கார் மற்றும் நிலம் வாங்கும் திட்டம்
  • மளிகைப் பொருட்கள் இரட்டிப்பு திட்டம்
  • ஸ்டாக் பாயின்ட் திட்டம்
  • முதலீட்டிற்கு வெளிநாடு செல்லும் திட்டம்

என பல்வேறு போலி திட்டங்களை அறிமுகப்படுத்தி, விழுப்புரம், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, கொடைக்கானல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பணம் வசூல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜான் கென்னடியை 2025ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு தற்போது இறுதி கட்ட விசாரணையில் உள்ளது. வரும் 26ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஏமாற்றம் அடைந்த அனைத்து பாதிக்கப்பட்டவர்களும், தங்களிடம் உள்ள தொடர்புடைய ஆவணங்களுடன் சேர்த்து, விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவை நேரில் அணுகி புகார் மனு அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள், விழுப்புரம் மேற்கு, சண்முகாபுரம், சேர்மன் சண்முகம் தெரு, எண் 7 -ல் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு: 0414-250366 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பொருளாதார குற்றப்பிரிவு (Economic Offences Wing - EOW) என்பது, அரசு அல்லது தனிநபர்களை பொருளாதார ரீதியாக ஏமாற்றும் வகையில் நடைபெறும் மோசடிகள் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட குற்றங்களை விசாரிக்கும் ஒரு சிறப்பு காவல் துறை பிரிவாகும்.

பொருளாதார குற்றப்பிரிவின் முக்கிய பணிகள்:

  • நிதி மோசடிகள் (Financial frauds)
  • பண மோசடி மற்றும் சேமிப்பு நிறுவன மோசடிகள்
  • வங்கிக் கடன் மோசடிகள்
  • தள்ளுபடி வாக்குறுதி மோசடிகள் (Ponzi schemes)
  • நம்பிக்கை முறையை துஷ்பயன்படுத்தி நிதி வசூல் செய்தல் (Cheating through trust schemes)
  • நகைச்சுவை முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் இரட்டை பணித் திட்டங்கள்
  • நிஜ எஸ்டேட் (Real Estate) மோசடி
  • வாடகைக் கடன் மோசடி, பாங்க் காகித மோசடி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க, குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க, மற்றும் நிதி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது.

தலைப்பு செய்திகள்

போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget